சிறுபான்மையினரை அச்சமூட்டும் வகையில், வேட்பாளர்கள் செயற்படுகின்றனர்: தேர்தல் கண்காணிப்பாளர்களிடம் றிசாட் தெரிவிப்பு 0
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சிறுபான்மை சமூகம் அச்சமற்ற சூழலில் வாக்களிப்பதை உறுதிப்படுத்த வேண்டுமெனவும், அதற்கு இடைஞ்சல் ஏற்படுத்தும் வகையில் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் சிலர் செயற்படுவதாகவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் சுட்டிக்காட்டியுள்ளார். தேர்தல் கண்காணிப்பாளர்கள் இந்த குற்றச்சாட்டு தொடர்பில் தமது அவதானத்தினை கூடியவரை செலுத்த வேண்டும் எனவும்