அரசியலைப் புறந்தள்ளி விட்டு, சமூகத்துக்காக ஒன்றிணைவோம்: காதர் மஸ்தான் 0
அரசியலை புறம்தள்ளி சமூகத்துக்காகவும், அதன் அபிவிருத்திக்காகவும் ஒன்றிணைவது அனைவரினதும் கடமை என முன்னாள் மீள்குடியேற்ற புனர்வாழ்வு மற்றும் வடக்கு மாகாண அபிவிருத்தி பிரதி அமைச்சரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கே . காதர் மஸ்தான் தெரிவித்தார்.வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பாவற்குளம் கிராமத்தில் பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக காணப்பட்ட தாய்-சேய் நிலையத்துக்கு