சாய்ந்தமருது குண்டுவெடிப்பு சம்பவம்: வெகுமதி வழங்குவதில் அநீதி இழைக்கப்பட்டுள்ளது: சார்ஜன் சேனாரத்ன 0
– புதிது செய்தியாளர் அஹமட் – சாய்ந்தமருதில் தற்கொலைக் குண்டுத்தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகள் தொடர்பில் உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்ட பொலிஸாருக்கு வெகுமதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் ஒருவர் தனக்கு பதவி உயர்வு வழங்கப்படாமல் பணப்பரிசு மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளமையானது அநீதியான தீர்மானம் என்று தெரிவித்துள்ளார். கல்முனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் சார்ஜன் சேனாரத்ன என்பவரே இவ்வாறு கூறியுள்ளார்.