1200 கிலோகிராம் போதைப் பொருள், அழிக்கப்படவுள்ளது 0
நாட்டில் பாதுகாப்பு படையினர் கைப்பற்றிய 1,200 கிலோகிராம் எடையுடைய போதைப் பொருள்களை அழிக்கும் நடவடிக்கை, எதிரவரும் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் மேற்கொள்ளப்படவுள்ளது. போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணியின் பணிப்பாளரும் விசேட வைத்திய அதிகாரியுமான சமந்த கித்தலவல ஆராய்ச்சி இந்தத் தகவலைத் தெரிவித்தார். கொழும்பில் நேற்று செவ்வாய்கிழமை டைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் இதனைக் கூறினார்.