அர்ஜுன ரணதுங்கவுக்கு பிணை 0
முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவை, கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதித்துள்ளது. நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் மற்றும் சூடுபட்ட ஒருவர் இறந்தமை தொடர்பில் இன்று கைது செய்யப்பட்ட அர்ஜுன ரணதுங்க, நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டார். இதன்போது அவரை 05 லட்சம் ரூபாய் பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிப்பதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.