இறக்காமம் பிரதேச சபை கூட்ட அமர்வுகளில் செய்தி சேகரிக்க, ஊடகவியலாளர்களுக்கு அழைப்பில்லை 0
– அஹமட் – இறக்காமம் பிரதேச சபையின் கூட்ட அமர்வுகளுக்கு செய்தி சேகரிக்கும் பொருட்டு, ஊடகவியலாளர்கள் அழைக்கப்படுவதில்லை என்று புகார் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, ஊடகவியலாளர்கள் அமர்வதற்குரிய ஒழுங்குகளும் அங்கு இல்லை என்றும் கூறப்படுகிறது. மக்கள் பிரதிநிதிகள் தாங்கள் பங்கேற்கும் சபைக் கூட்டங்களில் என்ன பேசுகிறார்கள் என்பதை, வெளியுலகுக்குத் தெரியப்படுத்துதல் அவசியமாகும். வாக்களித்த மக்களும் அதனையே எதிர்பார்கின்றனர்.