எரிபொருட்களின் விலையை, ஐ.ஓ.சி. அதிகரித்தாலும், நாம் அதிகரிக்க மாட்டோம்: அமைச்சர் அர்ஜுன உறுதி 0
இந்திய பெற்றோலிய கூட்டுத்தாபனம் (ஐ.ஓ.சி) ஒருதலைப்பட்சமாக எரிபொருட்களின் விலைகளை அதிகரித்தாலும், இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தற்போதுள்ள விலைக்கே தொடர்ந்தும் எரிபொருட்களை விற்பனை செய்யும் என்று, பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க இன்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளார். இதனால், இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு இழப்புக்கள் ஏற்பட்டாலும் பரவாயில்லை எனவும் அவர் கூறினார். எரிபொருள்களின் விலைகளை அதிகரிப்பதற்கு, ஐ.ஓ.சி.