சிஐடி போல் ஆள்மாறாட்டம் செய்து, 10 மில்லியன் ரூபாய் லஞ்சம் கோரிய, பெண் உள்ளிட்ட நால்வர் கைது 0
குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளைப் போல் (சிஐடி) ஆள்மாறாட்டம் செய்து 10 மில்லியன் ரூபாய் லஞ்சம் கோரிய நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தெஹிவளை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரின் முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபர்கள் நேற்று (29) கொள்ளுப்பிட்டியில் வைத்து கைது செய்யப்பட்டதாக லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள வீடொன்றில் சோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும்,