புல்மோட்டை கனியமணல் கூட்டுத்தாபனம் தனியாருக்குச் சொந்தமாகாது: அமைச்சர் றிசாத் உறுதி 0
– சுஐப் எம்.காசிம் – புல்மோட்டையில் அமைந்துள்ள இலங்கை கனிய மணல் கூட்டுத்தாபனம் ஒருபோதுமே தனியார்மயப்படுத்தப்படமாட்டாது எனவும், அவ்வாறான பிரசாரங்களை நம்ப வேண்டாமெனவும் அமைச்சர் றிசாத் பதியுதீன் உறுதிபடத் தெரிவித்தார். புல்மோட்டை கனியவள கூட்டுத்தாபனத்தில் தற்காலிகமாக பணிபுரியும் ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் வைபவம், இன்று வியாழக்கிழமை கொள்ளுப்பிட்டியில் உள்ள அமைச்சுக் கட்டிடத்தில் நடைபெற்றது.