சிங்களப் பெயரில் இனவாதப் பதிவு: முஸ்லிம் மாணவனுக்கு விளக்க மறியல் 0
பேஸ்புக் ஊடாக இனங்களுக்கிடையில் வன்முறைகளை ஏற்படுத்தும் விதமான பதிவுகளை மேற்கொண்டார் எனும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மாணவனை, விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. சந்தேக நபரான முஸ்லிம் மாணவன், பேஸ்புக்கில் சிங்களப் பெயரில் பதிவுகளை மேற்கொண்டார் என, விசாரணைகளிலிருந்து தெரியவருகிறது. மேற்படி வழக்கு இன்று திங்கட்கிழமை கொழும்பு மேலதிக நீதவான் ஷானிமா