பாலைக்குளி: மீளக்குடியேறிய பிறகும், மிஞ்சியிருக்கும் வலி 0
பாலும், தேனும், மீனும், மானும் உணவாக உண்டு செல்வச் செழிப்புடன் ஒரு காலத்தில் வாழ்ந்ததாகக் கூறுகின்றார்கள் பாலைக்குளி மக்கள். அந்த வாழ்க்கை இப்போது அவர்களிடம் இல்லை. இலங்கையில் யுத்தம் கடுமையாக நடந்து கொண்டிருந்த காலப்பகுதியில், பாலைக்குளி கிராமத்து மக்கள், அவர்களின் வாழ்விடங்களிலிருந்து துப்பாக்கி முனையில் விரட்டப்பட்டார்கள். அந்தக் கதைக்கு இப்போது சுமார் 30 வயதாகிறது. இலங்கையின் வடக்கு மாகாணத்திலுள்ள