மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் கொரோனா தொற்று உறுதி 0
கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டார கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 06ஆவது நாடாளுமன்ற உறுப்பினர் இவராவார். ஏற்கனவே அமைச்சர் வாசுதேவ நாணயகார, ராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர, பியல் நிஷாந்த, முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் மற்றும் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி ஆகியோர் பாதிக்கப்பட்டனர்.