மரண தண்டனை விதிக்கப்பட்ட கொலைக் குற்றவாளிக்கு, முன்னாள் ஜனாதிபதி மைத்திரி வழங்கிய பொதுமன்னிப்பு செல்லாது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு 0
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன – றோயல் பார்க் கொலைக் குற்றவாளி ஜூட் ஜயமஹாவுக்கு வழங்கிய பொதுமன்னிப்பு, அரசியலமைப்புச் சட்ட விதிகளுக்கு முரணானது என உச்ச நீதிமன்றம் இன்று (06) தீர்ப்பளித்துள்ளது. அதேவேளைன, குறித்த பொதுமன்னிப்பைரத்துச் செய்வதாகவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்தத் தீர்ப்பை வழங்கிய உச்ச நீதிமன்றம், ஜூட் ஷ்ரமந்த ஜயமஹாவுக்கு வழங்கப்பட்ட மன்னிப்பையும் செல்லுபடியற்றதாக்கியுள்ளது.