Back to homepage

Tag "பாடசாலை"

பாடசாலை மாணவர்களுக்கு 30 சதவீத விலைத் தள்ளுபடியில் பயிற்சிப் புத்தகங்கள்: அரச அச்சகக் கூட்டுத்தாபனம் வழங்குகிறது

பாடசாலை மாணவர்களுக்கு 30 சதவீத விலைத் தள்ளுபடியில் பயிற்சிப் புத்தகங்கள்: அரச அச்சகக் கூட்டுத்தாபனம் வழங்குகிறது 0

🕔3.Nov 2023

பாடசாலை பயிற்சிப் புத்தகங்களை தள்ளுபடி விலைத் திட்டத்தில் அரச அச்சகக் கூட்டுத்தாபனம் வழங்குகிறது. பாடசாலை பயிற்சி புத்தகங்களை 30% விலைத் தள்ளுபடியுடன் வழங்கப்படும் என கூட்டுத்தபானத்தின் தலைவர் நிமல் தர்மரத்ன தெரிவித்துள்ளார். விலைத் தள்ளுபடி திட்டம் நேற்று தொடங்கப்பட்டது என்று கூறிய அவர், அரச அச்சகக் கூட்டுத்தாபன தலைமை அலுவலகம் அல்லது அதன் விற்பனை கிளைகளில்

மேலும்...
பாடசாலைகளின் இரண்டாம் தவணை நாளையுடன் நிறைவு: மூன்றாந் தவணை ஆரம்ப திகதியும் அறிவிப்பு

பாடசாலைகளின் இரண்டாம் தவணை நாளையுடன் நிறைவு: மூன்றாந் தவணை ஆரம்ப திகதியும் அறிவிப்பு 0

🕔26.Oct 2023

அரசாங்க மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட சிங்கள மற்றும் தமிழ் மொழி மூலப் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணைக் காலம் குறித்த அறிவிப்பை கல்வியமைச்சு வெளியிட்டுள்ளது. அதன்படி, 2023 ஆம் ஆண்டின் இரண்டாவது தவணைக் காலம் 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் 27 ஆம் திகதி – நாளை வெள்ளிக்கிழமையுடன் முடிவடைகிறது. மூன்றாம் தவணை நொவம்பர் 01, 2023

மேலும்...
வெளியில் பணம் வசூலித்து கற்பிக்கும் ஆசிரியர்கள் தொடர்பில் சுற்றறிக்கை வெளியீடு

வெளியில் பணம் வசூலித்து கற்பிக்கும் ஆசிரியர்கள் தொடர்பில் சுற்றறிக்கை வெளியீடு 0

🕔15.Oct 2023

கிழக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளின் ஆசிரியர்கள் வெளியில் பணம் வசூலித்து கற்பிக்கின்றமை தொடர்பில் புதிய சுற்றறிக்கையொன்றினை – மாகாண கல்வி செயலாளர் வெளியிட்டுள்ளார். ஆசிரியர்கள் கற்பிக்கும் பாடத்தை தத்தமது பாடசாலை மாணவர்களுக்கு, பாடசாலை நேரத்துக்கு அப்பால் அல்லது வார இறுதி நாட்களில் பணம் வசூலித்து கற்பிப்பது, இந்த சுற்றறிக்கை மூலம் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த

மேலும்...
நண்பிகளின் தண்ணீர் போத்தல்களில் நஞ்சு கலந்த மாணவி: மாணவத் தலைவர் போட்டி காரணம் என தெரிவிப்பு

நண்பிகளின் தண்ணீர் போத்தல்களில் நஞ்சு கலந்த மாணவி: மாணவத் தலைவர் போட்டி காரணம் என தெரிவிப்பு 0

🕔15.Aug 2023

மாணவி ஒருவர் களைக்கொல்லியை குடிநீரில் கலந்து அருந்த கொடுத்ததால் சுகவீனமுற்ற 6 மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாரம்மல பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் 10ஆம் ஆண்டு கல்வி கற்கும் மாணவியொருவர் நேற்று (14) பாடசாலை நேரத்தில் இதனைச் செய்துள்ளார். சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள மாணவிகளில், களைக்கொல்லியை தண்ணீரில் கலந்ததாகக் கூறப்படும் மாணவியும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும்...
பாடசாலைகளில் கைத்தொலைபேசிப் பயன்பாடு அதிகரிப்பு: மாணவர்களுக்கு ஏற்படும் அபாயம் குறித்து எச்சரிக்கை

பாடசாலைகளில் கைத்தொலைபேசிப் பயன்பாடு அதிகரிப்பு: மாணவர்களுக்கு ஏற்படும் அபாயம் குறித்து எச்சரிக்கை 0

🕔31.Jul 2023

பாடசாலைகளில் கைத்தொலைபேசிகள் உள்ளிட்ட பிற தொழில்நுட்ப கருவிகளின் அதிகப்படியான பயன்பாடு காரணமாக, மாணவர்கள் செயன்முறை கல்வியில் இருந்து விலகும் அபாயம் காணப்படுகிறது என்று,   மனநல மருத்துவ நிபுணர்  ரூமி ரூபன் தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களிடம் போசும்போதே அவர் இதனைக் கூறினார். அடிமையாதல் மற்றும் மாணவர்களின் மனநலம் பாதிக்கப்படுதை கருத்தில் கொண்டே பாடசாலைகளில் கையடக்கத் தொலைபேசி

மேலும்...
பாடசாலைகளுக்கான விடுமுறைத் திகதி அறிவிப்பு

பாடசாலைகளுக்கான விடுமுறைத் திகதி அறிவிப்பு 0

🕔18.Jul 2023

அரச பாடசாலைகளுக்கான முதலாம் தவணை விடுமுறை பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இம்மாதம் 21ஆம் திகதி நிறைவடைகின்றன. அதன்படி குறித்த தவணைக்கான விடுமுறை 21ஆம் திகதி வழங்கப்பட்டு, மீண்டும் 24ஆம் திகதி இரண்டாம் தவணைக்காக பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

மேலும்...
பாடசாலை சத்துணவு திட்டத்துக்காக, இரண்டு மாதங்களுக்கு 240 கோடி ரூபா செலவு

பாடசாலை சத்துணவு திட்டத்துக்காக, இரண்டு மாதங்களுக்கு 240 கோடி ரூபா செலவு 0

🕔31.Jan 2023

பாடசாலை சத்துணவுத் திட்டத்தின் கீழ், கடந்த வருடம் நொவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்காக – மாகாண மட்டத்தில் உணவு வழங்குநர்களுக்கு 2.4 பில்லியன் (240 கோடி) ரூபாவை அரசு வழங்கியுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி மேல் மாகாணம் 39 கோடி 94 லட்சத்து 18.220 ரூபா, மத்திய மாகாணம் ரூ. 26 கோடி 99

மேலும்...
அறிவுக்கு ஆயிரம் கண்கள்: பார்வையற்ற மாணவன் ஆஷிப்பின் சாதனைக் கதை

அறிவுக்கு ஆயிரம் கண்கள்: பார்வையற்ற மாணவன் ஆஷிப்பின் சாதனைக் கதை 0

🕔23.Mar 2022

– மப்றூக் – பார்வையில்லாதவர்களின் உலகம் இருள்மயமானது. சிறிது நேரம் கண்களை மூடிக் கொண்டிருந்தால் அதனை நம்மால் உணர்ந்து கொள்ள முடியும்.  அவ்வாறானதொரு உலகில், தனது அறிவாற்றல் மூலம் விளக்கொன்றை ஏற்றத் தொடங்கியிருக்கிறார் – இலங்கையின் அம்பாறைமாவட்டம் சாய்ந்தமருது பிரதேசத்தில் அமைந்துள்ள ‘றியாழுல் ஜன்னாஹ்’ பாடசாலையில் கற்கும் பார்வையற்ற மாணவன் ஏ.ஆர். ஆஷிப், நாடளாவிய ரீதியில்

மேலும்...
பிள்ளையின் தாய் போல வந்த அதிகாரியிடம் சிக்கிய அதிபர்: லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் விளக்க மறியல்

பிள்ளையின் தாய் போல வந்த அதிகாரியிடம் சிக்கிய அதிபர்: லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் விளக்க மறியல் 0

🕔29.Jan 2022

லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் நேற்று (28) கைது செய்யப்பட்ட பாணந்துறையிலுள்ள பிரபல பாடசாலையொன்றின் அதிபரை பெப்ரவரி 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாணந்துறை மேலதிக நீதவான் இந்த உத்தரவை இன்று (29) பிறப்பித்துள்ளார். 150,000 ரூபாவை லஞ்சமாகப் பெற முற்பட்ட போதே அதிபர் நேற்று மாலை கைது செய்யப்பட்டார். லஞ்ச,

மேலும்...
சம்மாந்துறை பாடசாலையில் திருடப்பட்ட பெறுமதியான பொருட்கள் மீட்பு: சந்தேக நபர்களும் அகப்பட்டனர்

சம்மாந்துறை பாடசாலையில் திருடப்பட்ட பெறுமதியான பொருட்கள் மீட்பு: சந்தேக நபர்களும் அகப்பட்டனர் 0

🕔25.May 2021

– நூருல் ஹுதா உமர் – சம்மாந்துறை அல் – அர்ஷாத் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற திருட்டு சம்பவம் ஒன்றுடன் தொடர்புபட்டார்கள் எனும் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் மூவரை, கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் நீதிமன்றில் ஆஜர் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த பாடசாலை அலுவலகத்தில் இருந்த பொருட்கள் கடந்த 18ஆம் திகதி திருடப்பட்டுள்ளதாக

மேலும்...
பாடசாலைகள் மே 11 ஆரம்பம்; பல்கலைக்கழகங்களை திறப்பது தொடர்பில் தீர்மானமில்லை

பாடசாலைகள் மே 11 ஆரம்பம்; பல்கலைக்கழகங்களை திறப்பது தொடர்பில் தீர்மானமில்லை 0

🕔12.Apr 2020

அனைத்து பாடசாலைகளைகளையும், இரண்டாம் தவணைக்காக, மே மாதம் 11ஆம் திகதி, திங்கட்கிழமை, தொடங்கத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என, அரசாங்கம் அறிவித்துள்ளது. முன்னர் – இரண்டாம் தவணை, ஏப்ரல் 20ஆம் திகதி தொடங்குவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது. கொரோனா நோய்க்கிருமிப் பரவலைத் தடுப்பதற்காக அரசாங்கம் மேற்கொண்டிருந்த நடவடிக்கைகளின் முதற்கட்டமாகப் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தது. இந்த விடுமுறை மாணவர்களின் பாதுகாப்பை

மேலும்...
வகுப்பறையில் மாணவர் எண்ணிக்கைக்கு மட்டுப்பாடு விதிக்கப்படும்; கல்வியமைச்சர் தெரிவிப்பு

வகுப்பறையில் மாணவர் எண்ணிக்கைக்கு மட்டுப்பாடு விதிக்கப்படும்; கல்வியமைச்சர் தெரிவிப்பு 0

🕔17.Jun 2017

பாடசாலையின் வகுப்பறையொன்றில் 35 மாணவர்கள் மட்டுமே இருக்கலாமென வரையறுக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். அடுத்த மூன்று வருடங்களுக்குள் இந்த வரையறை அமுல்படுத்தப்படும் எனவும் அவர் கூறினார். பதுளையில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில், ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். சில பாடசாலைகளில் வகுப்பொன்றில் 40 மாணவர்கள் வரை உள்ளனர் என்பது

மேலும்...
பாடசாலைகளுக்கு அருகில் சிகரட் விற்பனையை தடைசெய்யும் சட்டம் வருகிறது:  சுகாதார அமைச்சர்

பாடசாலைகளுக்கு அருகில் சிகரட் விற்பனையை தடைசெய்யும் சட்டம் வருகிறது: சுகாதார அமைச்சர் 0

🕔19.Apr 2017

பாடசாலைகளுக்கு அருகாமையில் சிகரட் விற்பனை செய்வதைத் தடுக்கும் சட்டமொன்று கொண்டு வரப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். பாடசாலைகளிலிருந்து 500 மீற்றர் தூரத்துக்குள் சிகரட் விற்பனையினை, இந்தச் சட்டத்தின் மூலம் தடுக்கவுள்ளதாக அமைச்சர் விபரித்துள்ளார். ஏற்கனவே, உதிரிகளாக சிகரட்டுகளை விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தமையினை அடுத்து,

மேலும்...
பாடசாலை மாணவர்கள், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடத் தடை

பாடசாலை மாணவர்கள், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடத் தடை 0

🕔28.Feb 2017

பாடசாலை நேரத்தில் மாணவர்களை ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுத்தக் கூடாதென, கல்வியமைச்சு அறிவித்துள்ளது. சுற்றறிக்கையொன்றினூடாக இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் தேவையற்ற விதத்தில் அனுமதியின்றி வெளிநபர்கள் பாடசாலைக்குள் உள்நுழைவதை தடைசெய்யுமாறும் குறித்த அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மைக்காலங்களில் பெற்றோரிடம் இருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு எதிராகப் பதிவாகிய சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, கல்வியமைச்சின் செயலாளர் மேற்படி சுற்றறிக்கையினை வெளியிட்டுள்ளார்.

மேலும்...
நாளை பாடசாலை இல்லை; கல்வியமைச்சு அறிவிப்பு

நாளை பாடசாலை இல்லை; கல்வியமைச்சு அறிவிப்பு 0

🕔19.May 2016

நாட்டிலுள்ள அனைத்துப் பாடசாலைகளும் நாளை மூடப்படுமென கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். நாட்டிலுள்ள 22 மாவட்டங்கள், சீரற்ற காலநிலை காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், ஆயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வெள்ளம், மண்சரிவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும்...