Back to homepage

Tag "துப்பாக்கிச் சூடு"

வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளின் துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் பலி

வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளின் துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் பலி 0

🕔15.Nov 2023

லுனுகம்வெஹர தேசிய பூங்காவில் இன்று (15) மாலை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நபரொருவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அவர் இறந்துள்ளார். துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்துக்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த நபரின் அடையாளம் இதுவரை வெளியிடப்படவில்லை.

மேலும்...
அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பலியானோர் எண்ணிக்கை 22ஆக அதிகரிப்பு: சந்தேக நபர் ஒதுக்குப் படையைச் சேர்ந்தவர்

அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பலியானோர் எண்ணிக்கை 22ஆக அதிகரிப்பு: சந்தேக நபர் ஒதுக்குப் படையைச் சேர்ந்தவர் 0

🕔26.Oct 2023

அமெரிக்காவின் லூயிஸ்டன் நகரத்தில் நபரொருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது. முன்னர் 16 பேர் பலியானதாக செய்திகள் வெளியாகியிருந்தன. இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர் 40 வயதான ரொபர்ட் கார்ட் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரைத் தேடும் நடவடிக்கையில் பொலிஸார் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றனர். தாக்குதல்தாரியான ரொபர்ட் கார்ட் “ஆயுததாரியாகவும்,

மேலும்...
பொலிஸ் பரிசோதகரின் கொலைச் சந்தேக நபர், அதிரடிப் படையின் துப்பாக்கிச் சூட்டில் பலி

பொலிஸ் பரிசோதகரின் கொலைச் சந்தேக நபர், அதிரடிப் படையின் துப்பாக்கிச் சூட்டில் பலி 0

🕔12.Oct 2023

விசேட அதிரடிப்படையினரின் துப்பாக்கிச் சூட்டில், பாதாள உலக உறுப்பினர் எனச் சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 42 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தெல்வத்த – மீட்டியகொட பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் பாதாள உலக உறுப்பினர் என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலையடுத்து பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள்

மேலும்...
அவிசாவளை துப்பாக்கிச் சூட்டில் தொடர்புபட்டதாகக் கூறப்படும் ஊடகவியலாளரை பொலிஸ் காவலில்  வைத்து விசாரிக்க உத்தரவு

அவிசாவளை துப்பாக்கிச் சூட்டில் தொடர்புபட்டதாகக் கூறப்படும் ஊடகவியலாளரை பொலிஸ் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவு 0

🕔26.Sep 2023

அவிசாவளை – தல்துவ பிரதேசத்தில் கடந்த புதன்கிழமை (20) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில், இலங்கையில் உள்ள தனியார் ஊடக நிறுவனமொன்றின் ஊடகவியலாளர் ஒருவர் நேற்று முன்தினம் (24) கைது செய்யப்பட்ட நிலையில், அவரை பொலிஸ் தடுப்புக் காவலில் வைத்து விசாரிப்பதற்கு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. குறித்த துப்பாக்கிச் சூட்டுக்கு மூளையாக செயல்பட்ட – துபாயில்

மேலும்...
துப்பாக்கிச் சூட்டில் சிறுமி மரணம்: தந்தைக்கு இலக்கு வைக்கப்பட்டிருக்கலாம் என தெரிவிப்பு

துப்பாக்கிச் சூட்டில் சிறுமி மரணம்: தந்தைக்கு இலக்கு வைக்கப்பட்டிருக்கலாம் என தெரிவிப்பு 0

🕔17.Sep 2023

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான சிறுமியொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மருதானை – மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்திற்கு அருகில் இன்று (17) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றது. மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான தந்தையும் மகளும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், 6 வயது

மேலும்...
நீதிபதியின் இல்லத்தில் கடமையிலிருந்த பொலிஸ் சார்ஜன்ட் சடலமாக மீட்பு

நீதிபதியின் இல்லத்தில் கடமையிலிருந்த பொலிஸ் சார்ஜன்ட் சடலமாக மீட்பு 0

🕔28.Aug 2023

மாத்தறை மாவட்ட நீதிபதியின் இல்லத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் – துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதுடன், அவரின் சடலத்தை இன்று (28) காலை மாத்தறை பொலிஸார் மீட்டுள்ளனர். உயிரிழந்த பந்துல புஷ்பகுமார (வயது 55) நேற்றிரவு மாத்தறை கடற்கரை வீதியிலுள்ள மாவட்ட நீதிபதியின் இல்லத்தில் கடமையாற்றியிருந்த நிலையில், இன்று காலை கடமையில்

மேலும்...
முச்சக்கர வண்டியில் பயணித்தவர் துப்பாக்கிச் சூட்டில் பலி

முச்சக்கர வண்டியில் பயணித்தவர் துப்பாக்கிச் சூட்டில் பலி 0

🕔28.Aug 2023

துப்பாக்கிச் சூட்டில் 47 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெல்லம்பிட்டி – கிட்டம்பஹுவ பிரதேசத்தில் இன்று (28) பிற்பகல் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத ஆயுததாரிகள் இருவர் – கைத்துப்பாக்கியை பயன்படுத்தி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சம்பவத்தில் உயிரிழந்த நபர் முச்சக்கர வண்டியில் பயணித்துள்ளதாக

மேலும்...
தலங்கம துப்பாக்கிச் சூட்டில் பலியானவர் எனக் கூறி, தனது படத்தை ஹிரு, சுவர்ணவாஹினி காண்பித்ததாக நபர் ஒருவர் குற்றச்சாட்டு

தலங்கம துப்பாக்கிச் சூட்டில் பலியானவர் எனக் கூறி, தனது படத்தை ஹிரு, சுவர்ணவாஹினி காண்பித்ததாக நபர் ஒருவர் குற்றச்சாட்டு 0

🕔27.Aug 2023

பத்தரமுல்லை – தலங்கம பகுதியில் வெள்ளிக்கிழமை (25) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த நபர் எனக் கூறி, இலங்கையின் இரண்டு பிரபல தொலைக்காட்சி அலைவரிசைகள் தனது உருவத்தைக் காட்டியதாக கேகாலையைச் சேர்ந்த ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். ஜனக புஷ்பகுமார என்ற நபர், இவ்விவகாரம் குறித்து இரண்டு தொலை்காட்சி அலைவரிசைகளுக்கும் அறிவித்ததாகவும், ஆனால் சனிக்கிழமை (26) மாலை

மேலும்...
ஆள்மாறி நடத்தப்பட்டதாகக் கூறப்படும் துப்பாக்கிச் சூடு: தெஹிவளையில் சம்பவம்

ஆள்மாறி நடத்தப்பட்டதாகக் கூறப்படும் துப்பாக்கிச் சூடு: தெஹிவளையில் சம்பவம் 0

🕔20.Aug 2023

மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் துப்பாக்கி சூடு நடத்தியதில் 30 வயதுடைய நபர் ஒருவர் தெஹிவளை – ஆபர்ன் பிளேஸில் நேற்று (19) இரவு காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்த நபர், ஆபர்ன் பிளேஸை சேர்ந்த 30 வயதுடையவராவார். இவர் சிகிச்சைக்காக களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்றிரவு ஆபர்ன் பிளேஸில் உள்ள விளையாட்டு

மேலும்...
துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் பலி

துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் பலி 0

🕔30.Jul 2023

கொழும்பு – வாழைத்தோட்டம் மார்டிஸ் வீதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 20 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு துப்பாக்கிதாரிகள் – வீதியோரத்தில் நின்றிருந்த நபர் மீது ரி56 துப்பாக்கியால் தாக்குதல் நடத்தியதாக கூறியுள்ளனர். தாக்குதலில் காயமடைந்தவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்

மேலும்...
இளைஞர்கள் மீது துப்பாக்கிச் சூடு: காயமடைந்தவர்கள் திருகோணமலை வைத்தியசாலையில்

இளைஞர்கள் மீது துப்பாக்கிச் சூடு: காயமடைந்தவர்கள் திருகோணமலை வைத்தியசாலையில் 0

🕔3.Jul 2023

திருகோணமலை மாவட்டத்தில் இரு இளைஞர்கள் இன்று (03) அதிகாலை துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குச்சவெளியில் இருந்து இறக்கக்கண்டி நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள், உப்பள ஏரிக்கு நீர் வழங்கும் கால்வாயை அண்மித்த காட்டுப்பகுதியில் மறைந்திருந்த ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளனர். 17 மற்றும் 21 வயதுடைய இரு

மேலும்...
கிளிநொச்சியில் துப்பாக்கிச் சூடு: காயமடைந்தவர் வைத்தியசாலையில்

கிளிநொச்சியில் துப்பாக்கிச் சூடு: காயமடைந்தவர் வைத்தியசாலையில் 0

🕔28.Jun 2023

நபர் ஒருவர் மீது – கிளிநொச்சி உதயநகர் பகுதியில் இன்று (28) காலை துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டதில் அவர் காயமடைந்தார். மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் – காரில் பயணித்த 28வயது நபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்தவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு

மேலும்...
வெவ்வேறு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் இருவர் மரணம்: பலியானவரில் ஒருவர் பாதாள உலக குழுத் தலைவரின் கூட்டாளி

வெவ்வேறு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் இருவர் மரணம்: பலியானவரில் ஒருவர் பாதாள உலக குழுத் தலைவரின் கூட்டாளி 0

🕔21.Jun 2023

ஹோமாகம மற்றும் கொஸ்கொட பிரதேசங்களில் இடம்பெற்ற இரு வேறு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (21) காலை கொஸ்கொட இத்தருவ பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 42 வயதுடைய நபர் ஒருவர் கொல்லப்பட்டார். இச்சம்பவம் இன்று காலை 6.00 மணியளவில், துப்பாக்கிச் சூட்டுக்குள்ளானவரின்

மேலும்...
துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயம்

துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயம் 0

🕔18.Jun 2023

மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் மீது – அடையாளம் தெரியாத நபர்கள் மினுவாங்கொட பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில் மேற்படி இருவரும் காயமடைந்த நிலையில் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மினுவாங்கொடை பஸ்தியன் மாவத்தைக்கு அருகில் நடந்த மேற்படி துப்பாக்கிச் சூட்டை அடுத்து, சந்தேகநபர்கள் தப்பிச் சென்றதாக தெரியவருகிறது. காயமடைந்தவர்கள் 33 மற்றும் 43 வயதுடையவர்கள்

மேலும்...
மோட்டார் பைக்கில் வந்தவர்கள் துப்பாக்கிச் சூடு: காயமடைந்தவர் வைத்தியசாலையில்

மோட்டார் பைக்கில் வந்தவர்கள் துப்பாக்கிச் சூடு: காயமடைந்தவர் வைத்தியசாலையில் 0

🕔18.Mar 2023

மோட்டார் பைக்கில் வந்த இனந்தெரியாத இருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 40 வயதுடைய நபர் ஒருவர் காயமடைந்துள்ளார். இன்று (18) மாலை கொட்டாஞ்சேனை – பரமானந்த மாவத்தையில் இச் சம்பவம் இடம்பெற்றது. பாதிக்கப்பட்ட நபர் முச்சக்கர வண்டி திருத்துமிடம் ஒன்றில் இருந்த போது, துப்பாக்கிச் சூடு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அவர் கொழும்பு தேசிய

மேலும்...