டொக்டர் ஷாபி அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிப்பு 0
விசேட வைத்தியர் டொக்டர் ஷாபி சிஹாப்தீனை அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் குருநாகல் நீதவான் நீதிமன்றம் இன்று (06) விடுவித்துள்ளது. சந்தேகத்திற்கிடமான முறையில் சொத்துக்களை குவித்தமை, சட்டவிரோத கருத்தடை அறுவை சிகிச்சை செய்தமை மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை டொக்டர் ஷாபி எதிர்கொண்டார். நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு, நீதிமன்றம் அவருக்குச் சாதகமாகத் தீர்ப்பளித்து