அரசாங்கத்திலுள்ள சிறு கட்சிகள் விரும்பினால் வெளியேறலாம்; தடுத்து நிறுத்த மாட்டோம்: பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ 0
நாட்டில் தற்போதைய அரசாங்கத்தில் இணைந்துள்ள சிறு அரசியல் கட்சிகள் அரசாங்கத்தை விட்டு வெளியேற யோசனை இருந்தால், அவர்கள் எந்த நேரத்திலும் அத்தகைய தீர்மானத்தை எடுக்க முடியும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அவர்கள் அரசாங்கத்திலிருந்து வெளியேறிச் செல்ல விரும்பினால் அவர்களை வலுக்கட்டாயப்படுத்தி தடுத்து வைக்க எங்களுக்கு எந்தவொரு தேவையும் இல்லை என்றும் யார் சென்றாலும்