புலிகளால் பாவிக்கப்பட்டதாக நம்பப்படும் வெளிநாட்டுத் துப்பாக்கி மீட்பு 0
– பாறுக் ஷிஹான் – மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி – காங்கேயனோடை பகுதியில் கைத்துப்பாக்கி மற்றும் 02 மகசின்களை களுவாஞ்சிகுடி விசேட அதிரடிப்படையினர் நேற்று திங்கட்கிழமை(23) மாலை மீட்டுள்ளனர். களுவாஞ்சிகுடி விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், விடுதலைப்புலிகளினால் பாவிக்கப்பட்டதாக நம்பப்படும் வெளிநாட்டு தயாரிப்பான மைக்ரோ 09 எம்.எம் கைத்துப்பாக்கியே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.