உதவி பெறத் தகுதியானவர்களின் பட்டியல் அடுத்த வாரம் வெளிவரும்: ராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் 0
மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் மற்றும் நோயாளிகளுக்கான உதவிகளைப் பெறத் தகுதியானோர் பட்டியல், அடுத்த வாரம் வெளியிடப்படும் என்று சமூக வலுவூட்டல் ராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் தெரிவித்துள்ளார். இதேவேளை, ‘அஸ்வெசும’ பயனாளிகள் பட்டியல் தொடர்பான மேன்முறையீடுகள் அல்லது ஆட்சேபனைகளை இதுவரையில் யாராவது சமர்ப்பிக்கவில்லையெனில், அதற்கு இன்னும் கால அவகாசம் இருப்பதாகவும் அமைச்சர் கூறினார். மேன்முறையீட்டுச் செயற்பாடுகள் திருப்தியடையாத