பௌத்த மதத்தை அவமதித்த குற்றச்சாட்டில் தேரர் ஒருவர் கைது

பௌத்த மதத்தை அவமதித்த குற்றச்சாட்டில் தேரர் ஒருவர் கைது 0

🕔29.May 2023

பௌத்த மதத்துக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் கருத்துக்களை வெளியிட்டார் எனும் குற்றச்சாட்டின் பேரில் ராஜாங்கனே சத்தாாரத்ன தேரர் கைது செய்யப்பட்டுள்ளார். மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையிலான கருத்துக்களை வெளியிட்டார் என, இவருக்கு எதிராக மற்றொரு பௌத்த பிக்கு முறையிட்டிருந்தார். அதற்கமைய இன்று (29) அதிகாலை அனுராதபுரத்தில் வைத்து ராஜாங்கனே சத்தாரத்ன தேரரை குற்றப் புலனாய்வு பிரிவினர் கைது

மேலும்...
ஈஸ்டர் தாக்குதல்: முன்னாள் சட்ட மா அதிபரின் குற்றச்சாட்டை விசாரிக்க, நாடாளுமன்ற தெரிவுக்குழு அமைக்க கோரிக்கை

ஈஸ்டர் தாக்குதல்: முன்னாள் சட்ட மா அதிபரின் குற்றச்சாட்டை விசாரிக்க, நாடாளுமன்ற தெரிவுக்குழு அமைக்க கோரிக்கை 0

🕔28.May 2023

ஈஸ்டர் தின பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில் பாரிய சதி இருப்பதாக முன்னாள் சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா முன்வைத்த குற்றச்சாட்டை விசாரிப்பதற்காக நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை நியமிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் 21 நாடாளுமன்ற உறுப்பினர்கள் – சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் இது தொடர்பில் கோரிக்கை கடிதம் ஒன்றை கையளித்துள்ளனர்.  டி லிவேரா

மேலும்...
வீதி விபத்துக்களால் வருடாந்தம் மரணிப்போர் விவரம் வெளியானது: மோட்டார் சைக்கிள்களால் அதிக பலி

வீதி விபத்துக்களால் வருடாந்தம் மரணிப்போர் விவரம் வெளியானது: மோட்டார் சைக்கிள்களால் அதிக பலி 0

🕔27.May 2023

வீதி விபத்துக்களினால் வருடாந்தம் ஆகக் குறைந்தது 2900 பேர் நாட்டில் மரணிப்பதாக வீதிப் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தெரிவித்துள்ளது. அத்துடன், 7 ஆயிரத்து 700 பேரளவில் காயமடைவதாகவும் அந்த சபை கூறியுள்ளது. இதன்படி, நாளொன்றுக்கு சுமார் 8 பேர் – வீதி விபத்துக்களினால் மரணிப்பதுடன், 22 பேர் காயமடைவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில்

மேலும்...
தங்கம் கடத்திய அலி சப்ரி ரஹீம், மீண்டும் பிரமுகர் முனையம் வழியாக துபாய் பயணம்

தங்கம் கடத்திய அலி சப்ரி ரஹீம், மீண்டும் பிரமுகர் முனையம் வழியாக துபாய் பயணம் 0

🕔27.May 2023

தங்கம் கடத்திய குற்றச்சாட்டின் பேரில் அபராதம் விதிக்கப்பட்ட புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் – வியாழக்கிழமை (25) இரவு டுபாய் சென்றுள்ளதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் வியாழன் இரவு 8 மணியளவில் ‘ஃப்ளை துபாய்’ விமானத்தில் பிரமுகர் முனையம் வழியாக நாட்டை விட்டு வெளியேறினார். இருந்தபோதிலும் இவரின்

மேலும்...
ராஜகுமாரி மரணம்: வெலிக்கடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி இடமாற்றம்

ராஜகுமாரி மரணம்: வெலிக்கடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி இடமாற்றம் 0

🕔27.May 2023

பெண் ஒருவர் தடுப்புக் காவலில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் வெலிக்கடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். குறித்த பொறுப்பதிகாரி களப் படைத் தலைமையகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த மே மாதம் 11ஆம் திகதி கைது செய்யப்பட்ட பதுளையைச் சேர்ந்த 41 வயதான ஆர். ராஜகுமாரி என்ற பெண் –

மேலும்...
வென்றது உரிமைப் போராட்டம்: ஷண்முகா இந்துக் கல்லூரிக்கு ஹபாயாவுடன் சென்றார் ஆசிரியை பஹ்மிதா

வென்றது உரிமைப் போராட்டம்: ஷண்முகா இந்துக் கல்லூரிக்கு ஹபாயாவுடன் சென்றார் ஆசிரியை பஹ்மிதா 0

🕔26.May 2023

ஹபாயாவோடு கடமைக்குச் சென்றமைக்காக தடுக்கப்பட்ட திருகோணமலை ஷண்முகா இந்து மகளிர் கல்லூரி ஆசிரியை பஹ்மிதா ரமீஸ், அந்தப் பாடசாலைக்கு ஹபாயாவோடு சென்று தனது ஆவணங்களை அதிபரிடமிருந்து பெற்றுக் கொண்டார். கடந்த செவ்வாய்கிழமை (23) இச்சம்பவம் இடம்பெற்றது. ஆசிரியை பஹ்மிதா ரமீஸ் தரப்புக்கும் – ஷண்முகா இந்து மகளிர் கல்லூரி அதிபர் லிங்கேஸ்வரி ரவிராஜன் தரப்பிற்குமிடையில் கடந்த

மேலும்...
புத்தளத்தில் ஆசிரியரைத் தாக்கிய மாணவர்களுக்கு நிபந்தனையுடன் பிணை: ஒவ்வொரு ஞாயிறும் பொலிஸில் ஆஜராகுமாறும் உத்தரவு

புத்தளத்தில் ஆசிரியரைத் தாக்கிய மாணவர்களுக்கு நிபந்தனையுடன் பிணை: ஒவ்வொரு ஞாயிறும் பொலிஸில் ஆஜராகுமாறும் உத்தரவு 0

🕔26.May 2023

புத்தளத்திலுள்ள பாடசாலையொன்றின் ஆசிரியரை தாக்கியமைக்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மாணவர்கள் மற்றும் கைது செய்யப்பட்ட சந்தேகத்திற்குரிய மாணவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். குறித்த பாடசாலை ஆசிரியரின் வீட்டுக்கு கல்லெறிந்த மாணவர்கள், அவரை தாக்கினர். கடந்த 23ஆம் திகதி இச்சம்பவம் இடம்பெற்றது. தொடர்பில் 04 மாணவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டதுடன், 17 மாணவர்கள் நேற்று 25ஆம் திகதி கைது செய்யப்பட்டனர். சந்தேகத்திற்குரிய

மேலும்...
‘கிவ்ஆர்’ முறையிலான எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்படவுள்ளதாக அமைச்சர் கஞ்சன அறிவிப்பு

‘கிவ்ஆர்’ முறையிலான எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்படவுள்ளதாக அமைச்சர் கஞ்சன அறிவிப்பு 0

🕔26.May 2023

கிவ்ஆர் (QR) முறையின் கீழ் தற்போது வழங்கப்படும் எரிபொருள் ஒதுக்கீடு – அடுத்த மாத எரிபொருள் விலை திருத்தத்திலிருந்து அதிகரிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று (26) அறிவித்தார். இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் நிதி, வர்த்தக மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவுகளுடன் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அமைச்சர்

மேலும்...
தங்கம் கடத்திய அலி சப்ரி ரஹீமை, எம்.பி பதவியிலிருந்து நீக்கும் பிரேரணையை முன்வைக்க, கட்சித் தலைவர்கள் தீர்மானம்

தங்கம் கடத்திய அலி சப்ரி ரஹீமை, எம்.பி பதவியிலிருந்து நீக்கும் பிரேரணையை முன்வைக்க, கட்சித் தலைவர்கள் தீர்மானம் 0

🕔26.May 2023

அலி சப்ரி ரஹீமை – நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணையை முன்வைக்க வேண்டும் என கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர். இன்று (26) கூடிய நாடாளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழுவினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமை நாடாளுமன்ற உறுப்புரிமையிலிருந்து இடைநிறுத்துமாறு

மேலும்...
தனது சொத்து மதிப்பை வெளியிட்டார் ஜனக ரத்நாயக்க: அடுத்த ஜனாதிபதியும் தானே என்கிறார்

தனது சொத்து மதிப்பை வெளியிட்டார் ஜனக ரத்நாயக்க: அடுத்த ஜனாதிபதியும் தானே என்கிறார் 0

🕔26.May 2023

பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரட்நாயக்க, அவரின் சொத்து மதிப்புக் குறித்த தகவலை வெளியிட்டுள்ளார். அதன்படி, தனது மொத்த சொத்து மதிப்பு 400 கோடி ரூபா என அவர் தெரிவித்துள்ளார். இணைய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அத்துடன், நிச்சயமாக தானே – இந்த நாட்டின் அடுத்த ஜனாதிபதி எனவும், பிரபஞ்ச

மேலும்...
ஜப்பான் பிரதமரிடம் மன்னிப்புக் கோரினார் ஜனாதிபதி ரணில்

ஜப்பான் பிரதமரிடம் மன்னிப்புக் கோரினார் ஜனாதிபதி ரணில் 0

🕔26.May 2023

ஜப்பான் உதவியுடன் கொழும்பில் முன்னெடுக்கப்பட்டு வந்த இலகு ரயில் வேலைத்திட்டத்தினை இடை நடுவில் கைவிட்டுச் சென்றமைக்காக ஜப்பான் அரசாங்கத்திடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மன்னிப்புக் கோரினார். இரு தரப்பினரதும் இணக்கப்பாடு இல்லாமல் பாரிய திட்டங்களுக்கான இருதரப்பு ஒப்பந்தங்களை இடைநிறுத்துவதை தவிர்ப்பதற்கு அவசியமான சட்டதிட்டங்களை உருவாக்க எதிர்பார்ப்பதாக தெரிவித்த ஜனாதிபதி, பாரிய திட்டங்கள் குறித்த பரிந்துரைகள் மற்றும்

மேலும்...
பிரதியதிபர் மீது துப்பாக்கிச் சூடு

பிரதியதிபர் மீது துப்பாக்கிச் சூடு 0

🕔26.May 2023

பலப்பிட்டிய நீதிமன்ற வளாகத்துக்கு அருகில் இன்று (26) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். அப்பகுதியிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றின் பிரதி அதிபர் ஒருவரே – துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் பயணித்த போதே குறித்த நபர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில்

மேலும்...
தங்கம் கடத்திய அலி சப்ரி எம்.பிக்கு அதிகபட்ச அபராதம் விதிக்கப்பட்டது: நிதி ராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு

தங்கம் கடத்திய அலி சப்ரி எம்.பிக்கு அதிகபட்ச அபராதம் விதிக்கப்பட்டது: நிதி ராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு 0

🕔25.May 2023

அறிவிக்கப்படாத தங்கத்தை வைத்திருந்த குற்றத்துக்காக – புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமுக்கு விதிக்கப்பட்ட அபராதம், இலங்கையில் அண்மைக்காலமாக கைப்பற்றப்பட்ட தங்கம் தொடர்பாக விதிக்கப்பட்ட அதிகூடிய அபராதம் என்று, நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ராஜாங்க அமைச்சர்; கைப்பற்றப்பட்ட தங்கத்தின் பெறுமதியின் அடிப்படையில் அதிகபட்சமாக மூன்று

மேலும்...
அதிபர்களுக்கு பரீட்சைகள் ஆணையாளர் எச்சரிக்கை

அதிபர்களுக்கு பரீட்சைகள் ஆணையாளர் எச்சரிக்கை 0

🕔25.May 2023

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகள் – 2022 (2023) தொடர்பாக, பாடசாலை அதிபர்களுக்கு கல்வி அமைச்சு புதிய உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி – பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் அனுமதி அட்டைகளை தடுத்து வைக்க வேண்டாம் என – பாடசாலை அதிபர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர குறிப்பிட்டுள்ளார். அனுமதி அட்டைகள் கிடைக்காத

மேலும்...
முஸ்லிம் சமூகத்தின் மூத்த புத்திஜீவி வை.எல்.எஸ். ஹமீட் காலமானார்

முஸ்லிம் சமூகத்தின் மூத்த புத்திஜீவி வை.எல்.எஸ். ஹமீட் காலமானார் 0

🕔25.May 2023

– அஹமட் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் செயலாளரும் மூத்த அரசியல்வாதியுமான சட்ட முதுமாணி வை.எல்.எஸ். ஹமீட் இன்று (25) காலமானார். திடீர் சுகயீனம் காரணமாக கொழும்பிலுள்ள வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே இவர் மரணித்தார். கல்முனையைச் சேர்ந்த வை.எல்.எஸ். ஹமீட், முஸ்லிம் சமூகத்தில் குறிப்பிடத்தக்க புத்திஜீவியாக இருந்தார். தனது சமூகம் குறித்து

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்