ஹக்கீமின் அதிகாரப் பசிக்கு மீண்டுமொரு முறை பலியாகப் போகிறதா முஸ்லிம் சமூகம்?: அட்டாளைச்சேனையில் அரங்கேறப்போகும், அரசியல் கூத்து 0
– முகம்மது தம்பி மரைக்கார் – நாடு கிட்டத்தட்ட வங்குரோத்து நிலைக்கு மிக அருகில் உள்ளது. விரக்தியும், கோபமும் கொண்ட மனநிலையுடன் மக்கள் இருக்கின்றார்கள். ஆட்சியாளர்களை ஊடகங்கள் முன்பாக – கெட்ட வார்த்தைகளில் சிங்கள மக்களே திட்டித் தீர்க்கின்றனர். அவர்களில் தற்போதைய ஜனாதிபதியை ஆட்சிக்குக் கொண்டு வந்த சிங்கள மக்களும் உள்ளனர் எனத் தெரிகிறது. தற்போதைய