கை, சேவலுக்கு ஆதரவு வேண்டி, தலவாக்கலை கூட்டத்தில் ஜனாதிபதி; பெருந்தொகை மக்கள் பங்கேற்பு

கை, சேவலுக்கு ஆதரவு வேண்டி, தலவாக்கலை கூட்டத்தில் ஜனாதிபதி; பெருந்தொகை மக்கள் பங்கேற்பு 0

🕔28.Jan 2018

– க. கிஷாந்தன் – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று ஞாயிற்றுக்கிழமை, தலவாக்கலை விளையாட்டு மைத்தானத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டார். நுவரெலியா மாவட்டத்திலுள்ள உள்ளுராட்சி மன்றங்களில் கை மற்றும் சேவல் சின்னங்களில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு வேண்டி, இந்தக் கூட்டம் நடத்தப்பட்டது.இக் கூட்டத்தில் அமைச்சர்களான சுசில் பிரேம்ஜயந்த, எஸ்.பீ. திஸாநாயக்க, இ.தொ.கா. பிரதி

மேலும்...
ஆப்கான் தலைநகரில் தற்கொலைத் தாக்குதல்; 95 பேர் பலி: தலிபான் அமைப்பு உரிமை கோரியது

ஆப்கான் தலைநகரில் தற்கொலைத் தாக்குதல்; 95 பேர் பலி: தலிபான் அமைப்பு உரிமை கோரியது 0

🕔28.Jan 2018

 ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் நேற்று சனிக்கிழமை நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 95 பேர் பலியாகியுள்ளனர். வெடிபொருள் நிரப்பப்பட்ட அம்பியுலன்ஸ் மூலம் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதன்போது, ஆகக் குறைந்தது 158 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. அரச பணியாளர்களுக்காக மட்டும் பயன்படுத்தப்படும் வீதியொன்றில் அமைந்துள்ள பொலிஸ் சாவடிக்கு அருகில், அம்பியுலன்ஸ் வாகனத்தை ஓட்டிச் சென்று,

மேலும்...
வன்னி சிறுபான்மை முஸ்லிம்களைப் பின்பற்றி, நாரம்மல பிரதேச சபையிலும் மக்கள் பிரதிநிதிகளை உருவாக்குங்கள்: அமைச்சர் றிசாட் கோரிக்கை

வன்னி சிறுபான்மை முஸ்லிம்களைப் பின்பற்றி, நாரம்மல பிரதேச சபையிலும் மக்கள் பிரதிநிதிகளை உருவாக்குங்கள்: அமைச்சர் றிசாட் கோரிக்கை 0

🕔27.Jan 2018

  “வன்னி மாவட்டத்தில் ஜீவ மரணப் போராட்டம் நடாத்தி வரும் சிறுபான்மை முஸ்லிம்கள், ஐக்கியத்துடன் செயற்படுவதனாலேயே மக்கள் பிரதிநிதிதுவங்களை இலகுவாகப் பெற்றுக்கொள்கின்றனர். அதுபோல் குருநாகல் மாவட்ட முஸ்லிம்கள் ஒற்றுமையுடன் செயற்பட்டால் எதிர்காலத்தில் பிரதிநிதித்துவங்ளை எளிதில் பெற்றுக்கொள்ள முடியும்” என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். நாரம்மல பிரதேச சபைத்

மேலும்...
நசீரை தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிப்பதில் சிக்கல்கள் இல்லை: மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் உறுதிப்படுத்தினார்

நசீரை தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிப்பதில் சிக்கல்கள் இல்லை: மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் உறுதிப்படுத்தினார் 0

🕔27.Jan 2018

– மப்றூக் – தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சல்மான் ராஜிநாமா செய்தமையினால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்துக்கு, அட்டாளைச்சேனையையைச் சேர்ந்த ஏ.எல்.எம். நசீரை நியமிப்பதில் சிக்கல்கள் இல்லை என்பதை, மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். முகம்மட்  ‘புதிது’ செய்தித்தளத்துக்கு உறுதிப்படுத்தினார். தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், அப்பதவியில் இல்லாமலாகும் போது ஏற்படும் வெற்றிடத்துக்கு, அந்தக் கட்சியின் அங்கத்தவர் எவரொருவரையும் நாடாளுமன்ற

மேலும்...
வாக்குச் சீட்டை படம் பிடித்த ஆசிரியர் கைது; தபால் மூல வாக்களிப்பின் போது சம்பவம்

வாக்குச் சீட்டை படம் பிடித்த ஆசிரியர் கைது; தபால் மூல வாக்களிப்பின் போது சம்பவம் 0

🕔27.Jan 2018

தபால் மூல வாக்களிப்பின் போது, தான் வாக்களித்த வாக்குச் சீட்டினைப் படம் பிடித்த ஆசியர் ஒருவரை, கெபிடிகொல்லாவ பொலிஸார் கைது செய்தனர். இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை ஹொரவப்பொத்தானையில் இடம்பெற்றது. 44 வயதுடைய ஆசிரியர் ஒருவர், தபால் மூல வாக்களிப்பின்போது, தான் வாக்களித்த வாக்குச் சீட்டினை, வாக்களிப்பு நிலையத்தில் வைத்து தனது கைத்தொலைபேசி மூலமாக படம் பிடித்துள்ளார். இதனைக்

மேலும்...
02 கோடி ரூபாய் பெறுமதியான, போதை மாத்திரைகளுடன் பெண் கைது

02 கோடி ரூபாய் பெறுமதியான, போதை மாத்திரைகளுடன் பெண் கைது 0

🕔27.Jan 2018

போதைப் பொருள் மாத்திரைகளுடன் நாட்டுக்குள் நுழைவதற்கு முயற்சித்த நைஜீரியாவைச் சேர்ந்த பெண் ஒருவரை, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து, சற்று முன்னர் போதைப் பொருள் தடுப்புப் பொலிஸ் பிரிவினர் கைது செய்ததாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார். குறித்த பெண், சுமார் 02 கிலோகிராம் எடையுடைய மாத்திரைகளை தன்வசம் இதன்போது வைத்திருந்ததாகவும் அவர்

மேலும்...
சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் நிருவாக சபை கலைக்கப்பட்டது தவறு; முன்னைய சபை தொடர்ந்தும் இயங்கலாம்: வக்பு சபையின் தீர்ப்பாயம் அறிவிப்பு

சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் நிருவாக சபை கலைக்கப்பட்டது தவறு; முன்னைய சபை தொடர்ந்தும் இயங்கலாம்: வக்பு சபையின் தீர்ப்பாயம் அறிவிப்பு 0

🕔27.Jan 2018

– மப்றூக் – சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசலின் நிருவாக சபை கலைக்கப்பட்டு, விசேட நிருவாக சபை அமைக்கப்பட்டமை தவறான செயற்பாடு என, வக்பு சபையின் தீர்ப்பாயம் இன்று சனிக்கிழமை அறிவித்துள்ளது. அதேவேளை, முன்னைய சபையினர் தொடர்ந்து இயங்குவதற்கும் தீர்ப்பாயம் அனுமதி வழங்கியுள்ளது. சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் நிருவாக சபையை வக்பு சபையினர் கலைத்து விட்டு, புதிய

மேலும்...
பின்னோக்கிச் செல்லும் நாட்டை மீட்க ஒன்றிணையுமாறு, மஹிந்த ராஜபக்ஷ, காத்தான்குடியில் அழைப்பு

பின்னோக்கிச் செல்லும் நாட்டை மீட்க ஒன்றிணையுமாறு, மஹிந்த ராஜபக்ஷ, காத்தான்குடியில் அழைப்பு 0

🕔27.Jan 2018

– எம்.எஸ்.எம். நூர்தீன் – பின்னோக்கி செல்லும் இலங்கை நாட்டை மீட்க அனைவரையும் கை கோர்க்குமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். காத்தான்குடியில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில்

மேலும்...
போலி வாக்குச் சீட்டுகளை பகிர்ந்த, பெண் வேட்பாளர் கைது

போலி வாக்குச் சீட்டுகளை பகிர்ந்த, பெண் வேட்பாளர் கைது 0

🕔27.Jan 2018

போலியான வாக்குச் சீட்டுகளை விநியோகித்துக் கொண்டிருந்த பெண் வேட்பாளர் ஒருவரை, நேற்று வெள்ளிக்கிழமை கிளிநொச்சியில் வைத்து பொலிஸார் கைது செய்தனர். கரைச்சி பிரதேச சபைத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பாக போட்டியிடும் மேற்படி பெண் வேட்பாளர், நேற்றைய தினம் – தபால் மூல வாக்காளர்களுக்கு போலி வாக்குச் சீட்டுக்களை வழங்கிக் கொண்டிருந்த போது கைதானார்.

மேலும்...
தமிழர்களையும், முஸ்லிம்களையும் மோதச் செய்யும் திட்டத்துக்கு பலியாகி விடாதீர்கள்; மாந்தையில் அமைச்சர் றிசாட்

தமிழர்களையும், முஸ்லிம்களையும் மோதச் செய்யும் திட்டத்துக்கு பலியாகி விடாதீர்கள்; மாந்தையில் அமைச்சர் றிசாட் 0

🕔26.Jan 2018

தமிழர்களையும், முஸ்லிம்களையும் முட்டிமோதச் செய்து, பிரச்சினைகளை உருவாக்குவதற்காக இனவாதிகள் மேற்கொள்ளும் சூழ்ச்சிகளுக்கு இரண்டு சமூகமும் சோரம்போய்விடக் கூடாது என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்தார். மாந்தை மேற்கு பிரதேச சபையில் சொர்ணபுரி வட்டாரத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, வடமாகாண மஜ்லிஸுஸ் ஷூரா தலைவர் மௌலவி அஷ்ரப் முபாரக்

மேலும்...
அட்டாளைச்சேனையும் தேசியப்பட்டியலும்; கசப்பை மறந்து, நடிக்கும் தருணம்

அட்டாளைச்சேனையும் தேசியப்பட்டியலும்; கசப்பை மறந்து, நடிக்கும் தருணம் 0

🕔26.Jan 2018

– மப்றூக் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை, அட்டாளைச்சேனைக்கு வழங்குவதற்கு முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம் முன்வந்துள்ளார் எனக் கூறப்படுகிறது. இதன் மூலம் சுமார் 15 வருடங்கள் தேசியப்பட்டியலின் பெயரைச்  சொல்லி, அட்டாளைச்சேனையை ஹக்கீம் ஏமாற்றி வந்த கசப்பான அனுபவங்களை, முஸ்லிம் காங்கிரசின் அட்டாளைச்சேனை ஆதரவாளர்கள் மறந்து விட்டதாக

மேலும்...
வேட்பாளரின் வீடு தீக்கிரை; சதியாக இருக்கலாம் என சந்தேகம்

வேட்பாளரின் வீடு தீக்கிரை; சதியாக இருக்கலாம் என சந்தேகம் 0

🕔26.Jan 2018

– க. கிஷாந்தன் – அக்கரப்பத்தனை பிரதேசபைக்கான தேர்தலில் போட்டியிடும் மக்கள் விடுதலை முன்னணியின் வேட்பாளர் எம்.ஏ. ரஞ்சித் உப்பாலி என்பவரின் வீடு தீப்பற்றி எரிந்து சாம்பலாகியுள்ளது. இந்த சம்பவம் நேற்றிரவு 9.00 மணியளவில் இடம்பெற்றதாக விசாரணைகளை மேற்கொள்ளும் அக்கரப்பத்தனை பொலிஸார் தெரிவித்தனர். போபத்தலாவ வலாகம்புற கொலனியில் அமைக்கபட்டிருந்த வீட்டில் ஏற்பட்ட தீயினால் வீட்டில் இருந்த

மேலும்...
நௌசாத்துக்கு எதிரான மு.கா.வினரின் ஆர்ப்பாட்டம், சம்மாந்துறையில் தோல்வி

நௌசாத்துக்கு எதிரான மு.கா.வினரின் ஆர்ப்பாட்டம், சம்மாந்துறையில் தோல்வி 0

🕔26.Jan 2018

– ஏ.கே மிஸ்பாஹுல் ஹக் –சம்மாந்துறையின் முன்னாள் தவிசாளரும், சம்மாந்துறை பிரதேச சபைக்கான தேர்தல் வேட்பாளருமான ஏ.எம். நௌசாத்துக்கு எதிராக, இன்று ஜும்மாத் தொழுகையை தொடர்ந்து பத்ர் ஜும்மா பள்ளிவாயலுக்கு முன்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்பாட்ட நடவடிக்யொன்று, தோல்வியில் முடிவடைந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தை மு.காங்கிரஸினர் ஏற்பாடு செய்திருந்ததாகத் தெரிய வருகிறது. குறித்த ஆர்ப்பாட்டம் ஆரம்பமானவுடனேயே சம்மாந்துறை மக்களின் பலத்த

மேலும்...
பிரதமரை பலவீனப்படுத்துகின்றவர்களை, பலவீனப்படுத்துவதற்கு மு.கா. உதவுகிறது: இறக்காமத்தில் ஹக்கீம்

பிரதமரை பலவீனப்படுத்துகின்றவர்களை, பலவீனப்படுத்துவதற்கு மு.கா. உதவுகிறது: இறக்காமத்தில் ஹக்கீம் 0

🕔26.Jan 2018

– மப்றூக் – பிரதம மந்திரியை அரசாங்கத்துக்குள் பலவீனப்படுத்த நினைக்கின்றவர்களை பலவீனப்படுத்துவதற்கு முஸ்லிம் காங்கிரஸ் உதவுகின்றது என, முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம் தெரிவித்தார்.உள்ளுராட்சித் தேர்தலில் யானைச் சின்னம் சார்பாக முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிடுவதன் மூலம் இந்த உதவினைப் புரிவதாகவும் அவர் கூறினார்.இறக்காமம் பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமை இரவு நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில்

மேலும்...
வாக்களிப்பு நிலையங்களுக்குள் கைத் தொலைபேசிகளுக்கு தடை: மஹிந்த தேசப்பிரிய அறிவிப்பு

வாக்களிப்பு நிலையங்களுக்குள் கைத் தொலைபேசிகளுக்கு தடை: மஹிந்த தேசப்பிரிய அறிவிப்பு 0

🕔26.Jan 2018

உள்ளுராட்சித் தேர்தல் வாக்களிப்பு நிலையங்களுக்குள் வாக்காளர்கள் கைத் தொலைபேசி கொண்டு செல்வதை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தடைசெய்துள்ளார். தபால் மூல வாக்களிப்பின் போது, வாக்காளர் ஒருவர் தனது வாக்குச் சீட்டினை கைத் தொலைபேசியில் படம் பிடித்து, சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருந்தார். இது தொடர்பில் கருத்து வெளியிடும் போதே, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், மேற்படி

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்