விமல் வீரவன்சவின் சகோதரர் கைது

விமல் வீரவன்சவின் சகோதரர் கைது 0

🕔1.Sep 2016

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் சகோதரர் சரத் வீரவன்ச இன்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். நிதிக் குற்ற விசாரணைப் பிரிவினர், இவரைக் கைது செய்துள்ளதாகத் தெரியவருகிறது. அரச வாகனத்தை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில், இவர் கைதாகியுள்ளார். கோட்டே நீதவான் நீதிமன்றில் இவர் – இன்றைய தினம் ஆஜர் செய்யப்படுவார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும்...
அக்கரைப்பற்றில், அநியாயமான முறையில் ஆசிரியர் இடமாற்றம்; பாதிக்கப்பட்டோர் அமைச்சர் றிசாத்திடம் முறையீடு

அக்கரைப்பற்றில், அநியாயமான முறையில் ஆசிரியர் இடமாற்றம்; பாதிக்கப்பட்டோர் அமைச்சர் றிசாத்திடம் முறையீடு 0

🕔1.Sep 2016

  எந்தவிதமான காரணங்களுமின்றி முறைகேடான வகையில், தாங்கள் பொத்துவில் பிரதேச பாடசாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, அக்கரைப்பற்றைச் சேர்ந்த ஆசிரியர்கள், கைத்தொழில் வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீனிடம் முறையிட்டுள்ளனர். அம்பாறை கச்சேரியில் இன்று காலை வியாழக்கிழமை அமைச்சர் றிசாத் பதியுதீனை சந்தித்த அவர்கள், இந்த திடீர் இடமாற்றத்தினால் தங்களுக்கு ஏற்பட்டுள்ள கஷ்டங்களையும், மனக்குறைகளையும் எடுத்துரைத்தனர். முஸ்லிம் கட்சி ஒன்று,

மேலும்...
மலேசியா பறந்தார் மஹிந்த; சு.கா. மாநாட்டுக்கு டிமிக்கி

மலேசியா பறந்தார் மஹிந்த; சு.கா. மாநாட்டுக்கு டிமிக்கி 0

🕔1.Sep 2016

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இன்று வியாழக்கிழமை அதிகாலை மலேசியாவுக்கு பயணமானார் எனத் தெரிவிக்கப்படுகிறது. ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான யூ.எல் 318 என்ற விமானத்தினூடாக, அவர் மலேசியா சென்றுள்ளார். மஹிந்த ராஜபக்ஷவுடன், நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ உள்ளிட்ட  சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் பயணமாகியுள்ளனர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வருடாந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்கான அழைப்பு மஹிந்தவிற்கு விடுக்கப்பட்டிருந்த

மேலும்...
கால விசித்திரம்

கால விசித்திரம் 0

🕔1.Sep 2016

– முகம்மது தம்பி மரைக்கார் – ‘உனது ஒவ்வொரு தவறும், உன் எதிரியை உத்தமனாக்கிவிடும்’ என்பார்கள். நம்மில் அனேகமானோர் தாங்கள் உத்தமனாக இருப்பதை விடவும், தமது எதிராளியை அயோக்கியனாகச் சித்தரிப்பதிலேயே அதிக கரிசனை கொள்கின்றார்கள். எதிராளிகளை அயோக்கியர்களாகக் காட்டும் வகையில், நமது சித்திரங்களை வரையத் தொடங்குகின்றபோது, அதற்கு வெளியே, நமது எதிராளி உத்தமனாகவும், நாம் அயோக்கியர்களாகவும்

மேலும்...
நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டனுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டனுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை 0

🕔1.Sep 2016

நாடாளுமன்ற உறுப்பினர் ஜொன்ஸ்டன் பெனாண்டோவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தீர்மானித்துள்ளது. சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு, இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன மற்றும் கட்சியின் நடவடிக்கைகளை ஜோன்ஸ்டன் பகிரங்கமாக விமர்சனம் செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், மத்திய செயற்குழுவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக்

மேலும்...
இலங்கை வந்துள்ள பான் கீ மூன் –  ஜனாதிபதி, இன்று சந்திப்பு

இலங்கை வந்துள்ள பான் கீ மூன் – ஜனாதிபதி, இன்று சந்திப்பு 0

🕔1.Sep 2016

இலங்கை வந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூன், இன்று வியாழக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்கவுள்ளார். இதன்போது இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் மற்றும் அதன் முன்னேற்றம் குறித்து மூன் கேட்டறிவாறென தெரிவிக்கப்படுகிறது. அதனையடுத்து காலிக்கு விஜயம் செய்யவுள்ள ஐ.நா செயலாளர் அங்கு ‘நல்லிணக்கமும் ஒருங்கிணைந்து வாழ்தலில் இளைஞர்களின் வகிபாகமும்’ என்ற தொனிப்பொருளில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்