Back to homepage

வெளிநாடு

இன்னொரு போர் இடைநிறுத்தத்துக்கு தயார்: இஸ்ரேல் ஜனாதிபதி தெரிவிப்பு

இன்னொரு போர் இடைநிறுத்தத்துக்கு தயார்: இஸ்ரேல் ஜனாதிபதி தெரிவிப்பு 0

🕔19.Dec 2023

”இன்னொரு மனிதாபிமான போர் இடைநிறுத்தத்துக்கும் பணயக்கைதிகளை விடுவிப்பதற்கும், மேலதிக மனிதாபிமான உதவிக்கும் இஸ்ரேல் தயாராக உள்ளது” என்று அந்த நாட்டு ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக் தெரிவித்துள்ளார். தூதர்களின் கூட்டத்தில் இந்த விடயங்களை அவர் கூறியதாக அவரின் அலுவலகம் அறிவித்துள்ளது. “இதற்கான பொறுப்பு முழுவதுமாக (ஹமாஸ் தலைவர்) யாஹ்யா சின்வர் மற்றும் (பிற) ஹமாஸ் தலைமையிடம் உள்ளது”

மேலும்...
பட்டினியை போர் ஆயுதமாக இஸ்ரேல் பயன்படுத்துகிறது: மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றச்சாட்டு

பட்டினியை போர் ஆயுதமாக இஸ்ரேல் பயன்படுத்துகிறது: மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றச்சாட்டு 0

🕔18.Dec 2023

காஸாவில் பட்டினியை போர் ஆயுதமாக இஸ்ரேல் பயன்படுத்துவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றஞ்சாட்டியுள்ளது. ‘காஸா மக்களுக்கு இரண்டு மாதங்களுக்கும் அதிகமாக உணவு மற்றும் தண்ணீரை மறுத்து வருகிறது’ என – மனித உரிமைகள் கண்காணிப்பகம் தனது புதிய அறிக்கையில் தெரிவித்துள்ளதாக, அந்தக் கண்காணிப்பகத்தின் இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன பணிப்பாளர் ஒமர் ஷாகிர் குறிப்பிட்டுள்ளார். பேக்கரிகள், தானிய

மேலும்...
காஸாவில் ‘பசியின் அளவு’ அதிகரிப்பு

காஸாவில் ‘பசியின் அளவு’ அதிகரிப்பு 0

🕔17.Dec 2023

தெற்கு காசாவில் பொதுமக்களைக் கொன்ற இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலை பிரான்ஸ் கண்டித்துள்ளதாக அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது. இஸ்ரேலிய தாக்குதல்களுக்கு மத்தியில் காஸா பகுதி முழுவதும் ‘பசியின் அளவு’ அதிகரித்து வருவதால், ரஃபா கடவையில் உதவிக்கான போராட்டம் இடம்பெறுவதாக அல் ஜசீரா குறிப்பிடுகிறது. இதேவேளை வடக்கு காசாவில் உள்ள ‘கமால் அத்வான்’ வைத்தியசாலையின் முற்றத்தில் இஸ்ரேலிய

மேலும்...
தெற்கு காஸாவில் இரண்டு குடியிருப்பு கட்டடங்கள் குண்டு வீசி அழிக்கப்பட்டதில் 20 பேர் பலி

தெற்கு காஸாவில் இரண்டு குடியிருப்பு கட்டடங்கள் குண்டு வீசி அழிக்கப்பட்டதில் 20 பேர் பலி 0

🕔14.Dec 2023

தெற்கு காஸாவின் ரஃபாவில் – இஸ்ரேலிய விமானங்கள் ஒரே இரவில் இரண்டு குடியிருப்புக் கட்டடங்ளைத் தாக்கி அழித்ததில், 20 பேர் கொல்லப்பட்ட நிலையில், பலர் காயமடைந்தனர். செவ்வாய்க்கிழமை அதிகாலையில் இருந்து ஜெனின் பகுதியில் – இஸ்ரேலிய ராணுவம் நடத்திய தாக்குதலில் குறைந்தது 11 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உதவி நிறுவனம் மற்றொரு

மேலும்...
இஸ்ரேலிய சிப்பாயின் கீழ் தரமான செயல்: வீடியோவில் அம்பலம்

இஸ்ரேலிய சிப்பாயின் கீழ் தரமான செயல்: வீடியோவில் அம்பலம் 0

🕔11.Dec 2023

காஸாவில் உள்ள பாலஸ்தீனியர்களுக்கு சொந்தமான கடையை இஸ்ரேலிய படையைச் சேர்ந்த சிப்பாய் ஒருவர் சேதப்படுத்தி, அதில் உள்ள பொருட்களை கேலி செய்யும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இராணுவ உடை அணிந்த நபர், பொருட்களை எறிந்து – நொறுக்குவதைக் இந்த வீடியோவில் காண முடிகிறது. அதே நேரத்தில் கமராவுக்குப் பின்னால் உள்ள சிரிப்பதையும் கேட்க முடிகிறது. குறித்த

மேலும்...
காஸாவில் 36 சதவீதமான குடும்பங்கள் ‘கடுமையான பசியை’ அனுபவிப்பதாக, உலக உணவுத் திட்டம் தெரிவிப்பு

காஸாவில் 36 சதவீதமான குடும்பங்கள் ‘கடுமையான பசியை’ அனுபவிப்பதாக, உலக உணவுத் திட்டம் தெரிவிப்பு 0

🕔10.Dec 2023

காஸாவில் 36 சதவீத குடும்பங்கள் இப்போது ‘கடுமையான பசியை’ அனுபவித்து வருவதாக ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது. இதேவேளை அண்மைய கணக்கெடுப்பு ஒன்றில் – ஒவ்வொரு மூன்று குடும்பங்களில் ஒரு குடும்பம் கடுமையான பசியை அனுபவிப்பதாக – சமீபத்திய கணக்கெடுப்பில் கண்டறிந்துள்ளதாக, ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனிய பிரதேசத்தில் உள்ள மனிதாபிமான விவகாரங்களின் ஒருங்கிணைப்புக்கான ஐ.நா

மேலும்...
கஞ்சா மருந்துகளை சட்டபூர்வமாக்கும் மசோதா, ஜப்பான் நாடாளுமன்றில் நிறைவேற்றம்

கஞ்சா மருந்துகளை சட்டபூர்வமாக்கும் மசோதா, ஜப்பான் நாடாளுமன்றில் நிறைவேற்றம் 0

🕔7.Dec 2023

கஞ்சாவை அடிப்படையாகக் கொண்ட மருந்துகளை சட்டபூர்வமாக்குவதற்கான மசோதா – ஜப்பான் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது. அதே நேரத்தில் கஞ்சாவை பொழுதுபோக்கிற்கு பயன்படுத்துவதற்கான தடையை கடுமையாக்கியுள்ளது. ஜப்பானிய மேல் சபையில் நேற்று புதன்கிழமை நிறைவேற்றப்பட்ட கஞ்சா மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாட்டுச் சட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள், கஞ்சாவிலிருந்து பெறப்பட்ட மருத்துவப் பொருட்கள் மீதான தடையை நீக்குவதற்கு வழி வகுக்கும். கஞ்சா

மேலும்...
பாதுகாப்பான பகுதியாக அறிவிக்கப்பட்ட தெற்கு காஸாவிலும் இஸ்ரேல் கண்மூடித்தனத் தாக்குதல்: ஐ.நா ஊழியர்கள் 130 பேர் பலி

பாதுகாப்பான பகுதியாக அறிவிக்கப்பட்ட தெற்கு காஸாவிலும் இஸ்ரேல் கண்மூடித்தனத் தாக்குதல்: ஐ.நா ஊழியர்கள் 130 பேர் பலி 0

🕔5.Dec 2023

தெற்கு காஸாவில் இஸ்ரேலிய ராணுவம் வான் மற்றும் தரைவழித் தாக்குதலை மேற்கொண்டு வருவதால் – போர் தீவிரமடைந்துள்ளது. முன்னர் வடக்கு காஸாவிலிருந்து பொதுமக்களை தெற்கு காஸாவுக்கு இடம்பெயருமாறும், பாலஸ்தீனர்களுக்கு பாதுகாப்பான பகுதியாக தெற்கு காஸா அறிவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்ட “காஸாவில் பாதுகாப்பான வலயங்கள் சாத்தியமில்லை” என்று யுனிசெஃப் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். தெற்கு காஸாவில்

மேலும்...
இஸ்ரேலின் தொடரும் நர வேட்டை: காஸாவில் வெள்ளிக்கிழமைக்குப் பின்னர் 200க்கும் மேற்பட்டோர் கொலை

இஸ்ரேலின் தொடரும் நர வேட்டை: காஸாவில் வெள்ளிக்கிழமைக்குப் பின்னர் 200க்கும் மேற்பட்டோர் கொலை 0

🕔2.Dec 2023

இஸ்ரேல் – ஹமாஸ் போர்நிறுத்தம் வெள்ளிக்கிழமை முடிவடைந்த பின்னர், காஸாவில் கிட்டத்தட்ட 200 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஒக்டோபர் 07 ஆம் திகதிக்குப் பின்னர் அங்கு மொத்த உயிரிழப்பு 15 ஆயிரத்தை தாண்டியுள்ளது. 37 ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். கான் யூனிஸ் மற்றும் ரஃபாவின் தெற்கு நகரங்கள் உட்பட, காஸா முழுவதும் பல இலக்குகளை இஸ்ரேலிய விமானங்கள்

மேலும்...
காஸாவில் போர் நிறுத்தம் மேலும் ஒரு  நாள் நீடிப்பு

காஸாவில் போர் நிறுத்தம் மேலும் ஒரு நாள் நீடிப்பு 0

🕔30.Nov 2023

காஸா போர் நிறுத்தம் மேலும் ஒருநாள் (ஏழாவது நாளாக) நீடிக்கப்பட்டுள்ளது என – இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. பணயக்கைதிகளை விடுவிக்கும் செயல்முறையைத் தொடர மத்தியஸ்தர்களின் முயற்சிகள் மற்றும் ஒப்பந்தத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு, இந்த போர் நிறுத்தம் நீடிக்கப்பட்டுள்ளதாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இதேவேளை, ஏழாவது நாளாக போர் நிறுத்தத்தை நீடிக்க ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக ஹமாஸ் தனி

மேலும்...
காஸாவில் குண்டுத் தாக்குதல்களால் இறந்தவர்களை விடவும் அதிகமானோர் உயிரிழக்கும் அபாயம்:  WHO எச்சரிக்கை

காஸாவில் குண்டுத் தாக்குதல்களால் இறந்தவர்களை விடவும் அதிகமானோர் உயிரிழக்கும் அபாயம்: WHO எச்சரிக்கை 0

🕔28.Nov 2023

காஸாவில் சுகாதார அமைப்பை சரி செய்யாவிட்டால், குண்டுத் தாக்குதல்களால் அங்கு ஏற்பட்ட மரணங்களை விடவும் அதிகமான உயிரிழப்பு – நோயால் ஏற்படக் கூடும் என, உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) எச்சரித்துள்ளது. இது இவ்வாறிருக்க கட்டார் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய உளவுத்துறை நிறுவனங்களின் தலைவர்கள் தோஹா சென்றதாக அல் ஜசீரா தெரிவித்துள்ளது.

மேலும்...
காஸாவில் இடைக்கால போர் நிறுத்தம், மேலும் இரண்டு நாட்களுக்கு நீடிப்பு

காஸாவில் இடைக்கால போர் நிறுத்தம், மேலும் இரண்டு நாட்களுக்கு நீடிப்பு 0

🕔27.Nov 2023

காஸா பகுதியில் அமுலிலுள்ள இடைக்கால போர் நிறுத்தை, மேலும் இரண்டு நாட்களுக்கு நீடிக்க உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக, கட்டார் வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் டொக்டர் அமீர் அல் – அன்சாரி தெரிவித்துள்ளார். இதனை ஹமாஸ் இயக்கமும் உறுதிப்படுததியுள்ளதாக அல் – ஜசீரா வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளது. கட்டார் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளுடன் செய்து கொள்ளப்பட்ட

மேலும்...
காஸாவில் போர் நிறுத்தம் இன்று நிறைவுக்கு வருகிறது: தொடர்வதற்கு நெதன்யாஹு நிபந்தனை விதிப்பு

காஸாவில் போர் நிறுத்தம் இன்று நிறைவுக்கு வருகிறது: தொடர்வதற்கு நெதன்யாஹு நிபந்தனை விதிப்பு 0

🕔27.Nov 2023

ஹமாஸ் – இஸ்ரேல் இடையிலான நான்கு நாள் போர் நிறுத்தம் இன்று திங்கட்கிழமை நிறைவுக்கு வரவுள்ள நிலையில், மேலும் கைதிகளை ஹமாஸ் விடுவிக்குமானால், காஸாவில் போர் நிறுத்தத்தை நீடிக்கத் தயாராக இருப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் எகிப்து, கட்டார் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் திங்கள்கிழமை முடிவடையும் நான்கு நாள் போர் நிறுத்தத்தை நீடிக்குமாறு

மேலும்...
இரண்டாம் கட்டமாக கைதிகள் விடுவிப்பதை தாமதப்படுத்த ஹமாஸ் முடிவு: காரணமும் வெளியிடப்பட்டது

இரண்டாம் கட்டமாக கைதிகள் விடுவிப்பதை தாமதப்படுத்த ஹமாஸ் முடிவு: காரணமும் வெளியிடப்பட்டது 0

🕔25.Nov 2023

இரண்டாம் கட்டமாக தம்மிடமுள்ள கைதிகளை விடுவிப்பதை தாமதப்படுத்த முடிவு செய்துள்ளதாக ஹமாஸ் அறிவித்துள்ளது. “காஸா பகுதியின் வடக்கே – உதவிப் பொருள்களை ஏற்றிய வாகனங்களை அனுமதிப்பது தொடர்பான ஒப்பந்தத்தின் விதிமுறைகளுக்கு இஸ்ரேல் கட்டுப்படும் வரை, இரண்டாவது தொகுதி கைதிகளை விடுவிப்பதை தாமதப்படுத்த முடிவு செய்தோம்” என, ஹமாஸின் ராணுவப் பிரிவான அல் கஸ்ஸாம் படையணி கூறியுள்ளது.

மேலும்...
இஸ்ரேலியர் 13 பேர் உட்பட, 24 பணயக் கைதிகளை ஹமாஸ் விடுவித்தது

இஸ்ரேலியர் 13 பேர் உட்பட, 24 பணயக் கைதிகளை ஹமாஸ் விடுவித்தது 0

🕔24.Nov 2023

காஸாவில் நான்கு நாட்கள் போர் இடைநிறுத்தம் அமுலுக்கு வந்துள்ள நிலையில், 13 இஸ்ரேலிய பொதுமக்கள் உட்பட 24 பணயக் கைதிகளை ஹமாஸ் விடுவித்துள்ளதாக, யுத்த நிறுத்தத்துக்கு மத்தியஸ்தம் வகிக்கும் கட்டார் நாட்டின் வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது. விடுவிக்கப்பட்டுள்ள இஸ்ரேலியர்களில் இரட்டை பிரஜாவுரிமை உள்ளோரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் தாய்லாந்து நாட்டவர் 10 பேரும், பிலிப்பைன்ஸ் நாட்டவர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்