ஜனாதிபதி நாடு வந்தடைந்தார்
பிரித்தானியா சென்று, அங்கிருந்து இந்தியாவுக்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நேற்று சனிக்கிழமை இரவு நாடு திரும்பினார்.
யு.எல். 172 எனும் விமானம் மூலம் பெங்ளுரிலிருந்து ஜனாதிபதி நாட்டுக்குப் புறப்பட்டார்.
இந்தியாவிலுள்ள சான்ஜி விகாரையில் நேற்றைய தினம் அநகாரிக தர்மபாலவின் சிலை திறப்பு நிகழ்வொன்றில் ஜனாதிபதி கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.