மத்திய மாகாண ஆளுநர் மரணம்
மத்திய மாகாண ஆளுநர் சுரங்கனி எல்லாவெல இன்று திங்கட்கிழமை அதிகாலை மரணமடைந்தார்.
சுகயீனமுற்ற நிலையில், கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் மரணமடைந்தார்.
இறக்கும் போது அவருக்கு 75 வயது.
நரம்பு சம்பந்தமான நோயினால் பாதிக்கப்பட்டிருந்த இவர், சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.