‘ஐஸ்’ போதைப் பொருளுடன் கல்முனைக்குடி நபர்கள் கைது

🕔 November 22, 2024

– பாறுக் ஷிஹான் –

ஸ் போதைப் பொருட்களை நீண்ட காலமாக சிறு பொதி செய்து வியாபாரம் செய்து வந்த – இரண்டு சந்தேக நபர்களை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்தனர்.

நேற்று வியாழக்கிழமை (21 ) இரவு  கல்முனை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கிடமாக நடமாடிய இருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டனர்.

இதன் போது கல்முனைக்குடி 09ஆம் பிரிவு மதிரிஸா வீதியில்  வசிக்கும் 26 வயதுடைய 02 பிள்ளைகளின் தந்தை, 970 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருளுடனும் கல்முனைக்குடி 02ஆம் பிரிவு  கிறீன் பீல்ட் பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய சந்தேக நபர், 870 மில்லி கிராம் போதைப் பொருளுடனும் கைதாகினர்.

கைதான இரண்டு சந்தேக நபர்களையும் கல்முனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்த கல்முனை விசேட அதிரடிப்படையினர், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இந்த கைது நடவடிக்கையானது கல்முனை விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஏ.டி.சி.எஸ். ரத்நாயக்கவின் பணிப்புரைக்கமைய  முன்னெடுக்கப்பட்டது.

கடந்த சில தினங்களாக இப்பகுதியில் ஐஸ் போதைப்பொருள் அதிகளவாக மீட்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

தொடர்பான செய்தி: ஐஸ் போதைப் பொருள் வியாபாரி, இரண்டாவது தடவையாகவும் கல்முனையில் கைது

Comments

புதிது பேஸ்புக் பக்கம்