வசந்தம் தொலைக்காட்சியில், ‘அரசியலமைப்பு மாற்றமும் சிறுபான்மை மக்களின் எதிர்பார்ப்புகளும்’

‘அரசியலமைப்பு மாற்றமும் சிறுபான்மை மக்களின் எதிர்பார்ப்புகளும்’ எனும் தலைப்பில், வசந்தம் தொலைக்காட்சியில் இன்று சனிக்கிழமை இரவு 9.00 மணிக்கு கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது.
வசந்தம் தொலைக் காட்யியில் ஒளிபரப்பாகும் ‘பள்ளிக்கூடம்’ நிகழ்ச்சியில் மேற்படி கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
கொழும்பு பல்கலைக்கழக சிரேஷ்ட சட்ட விரிவுரையாளர் ஏ. சர்வேஷ்வரன், நாடாராளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜ் மற்றும் நல்லாட்சிக்கான மக்கள் முன்னணியின் பிரசார செயலாளர் சிராஜ் மஸ்ஸூர் ஆகியோர் இந் நிகழ்வில் பங்கு கொள்கின்றனர்.
புதிய அரசியலமைப்பு தொடர்பில் ஆர்வமும், தேடலும் உள்ளவர்களுக்கு இந் நிகழ்ச்சி பெரிதும் பயனுள்ளதாக அமையும்.