நாய்பட்டிமுனை – நற்பிட்டிமுனையானது

🕔 July 14, 2024

– பாறுக் ஷிஹான் –

க்கரைப்பற்று பிரதேச அஞ்சல் அத்தியட்சகர் பிரிவில் – கல்முனை பிரதான அஞ்சல் அலுவலகத்தின் கட்டுப்பாட்டின் கீழுள்ள ‘நாய்பட்டிமுனை’ உப அஞ்சல்  அலுவலகம்    2024.04.02ஆம் திகதி தொடக்கம்  ‘நற்பிட்டிமுனை’ உப தபாற் கந்தோர் என மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் அஞ்சல் அலுவலக உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு நற்பிட்டிமுனை அனைத்து பள்ளிவாசல்கள் நிர்வாகம் கொண்டு வந்ததையடுத்து, 2024.05.31 திகதி  வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக, குறித்த பெயர் மாற்றப்பட்டுள்ளது.

இதன்படி குறித்த உப தபாற் கந்தோரின் பழைய பெயர்ப் பலகை அஞ்சல் மா அதிபர் எஸ்.ஆர்.டபிள்யூ.எம்.ஆர்.பி. சத்குமாரவின் உத்தரவுக்கு அமைய  அகற்றப்பட்டு, புதிய பெயர்ப் பலகை தற்போது பொருத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய இனிவரும் காலங்களில் குறித்த தபாற்கந்தோர் – ‘நற்பிட்டிமுனை உப தபாற் கந்தோர்’ என அழைக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த செயற்பாட்டை முன்னெடுத்த நற்பிட்டிமுனை அனைத்து பள்ளிவாசல் தலைவர் உட்பட பலருக்கு நற்பிட்டிமுனை பொதுமக்கள் தமது நன்றிகளை தெரிவித்துள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்