அலி சப்ரி எம்.பிக்கு பிடியாணை

🕔 July 9, 2024

சொத்துக்களை சேதப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில், புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கற்பிட்டி சுற்றுலா நீதவான் நீதிமன்றம் – இந்தப்பகிரங்க பிடியாணையினைப் பிறப்பித்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினா் அலி சப்ரி ரஹீமை எதிரியாக குறிப்பிட்டு, கற்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குறிஞ்சாம்பிட்டியில் அமைந்துள்ள அரச சார்பற்ற நிறுவனமொன்று தாக்கல் செய்த வழக்கை விசாரித்த போதே – நீதவான் இந்த உத்தரவை வழங்கியுள்ளாா்.

அரச சார்பற்ற நிறுவனமொன்றுக்கு சொந்தமான கட்டிடத்துக்குள் நுழைந்து சொத்துக்களை சேதப்படுத்தியதாக, நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிராக கற்பிட்டி பொலிஸார் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இந்த வழக்கு விசாரணையில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆஜராகாமையினை அடுத்து, அவருக்கு எதிராக – இந்தப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்