சம்பந்தனின் இடத்துக்கு தெரிவான குகதாசன், நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றார்

🕔 July 9, 2024

ர். சம்பந்தன் மரணமானதை அடுத்து, திருகோணமலை மாவட்டத்தில் வெற்றிடமான நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு நியமிக்கப்பட்ட கதிரவேலு சண்முகம் குகதாசன் இன்று (09) நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

நாடாளுமன்ற அமர்வு இன்று (09) காலை ஆரம்பிக்கப்பட்ட நிலையில், சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் இவர் பதவியேற்றார்.

திருகோணமலை, திரியாயைப் பிறப்பிடமாகக் கொண்ட குகதாசன், நீண்ட காலம் கனடாவில் வசித்து வந்தார். 

2020 முதல் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்டக் கிளைத் தலைவராகப் பணியாற்றுகிறார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் குகதாசன் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு 16,770 வாக்குகளைப் பெற்றார். 

இத்தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் ஒரு உறுப்பினரையே தமிழரசுக் கட்சி பெற்றது. ஆர். சம்பந்தனுக்கு அடுத்து அதிக வாக்குகளை பெற்ற அடிப்படையில் இவர் சம்பந்தனின் மறைவை அடுத்து நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்