கடலில் மிதந்து வந்த போத்தலில் இருந்த திரவத்தை அருந்திய 06 மீனவர்களில் நால்வர் பலி

🕔 June 29, 2024

டலில் மிதந்துவந்த போத்தலில் இருந்த திரவத்தை – மதுபானம் என நினைத்து, மீன்பிடி படகின் பணியாளர்கள் அருந்தியதியதில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 04 ஆக அதிகரித்துள்ளதாக இலங்கை கடற்படை உறுதிப்படுத்தியுள்ளது.

இதேவேளை, மேலும் இரண்டு மீனவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

தங்காலையில் இருந்து புறப்பட்ட மீன்பிடிப் படவில் இருந்த 06 பணியாளர்கள், கடலில் மிதந்து வந்த போத்திலில் இருந்த திரவத்தை மதுபானம் என நினைத்து குடித்ததில், இருவர் உயிரிழந்துள்ளதாகவும், மீதமுள்ள நால்வர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் இன்று (29) முற்பகல் தெரிவிக்கப்பட்டிருந்தது.

படகு இலங்கை கடற்கரையில் இருந்து 320 கடல் மைல் (592.64 கிமீ) தொலைவில் இருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

மற்றொரு படகின் உதவியுடன் குறித்த நபர்கள் இருந்த படகு மீண்டும் தரையிறக்கப்படவுள்ளதாக, இலங்கை கடற்படை செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருந்தார்.

இந்த பின்னணியில், குறித்த சம்பவத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 04 ஆக உயர்ந்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்