நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடைந்துள்ளது: நிதி ராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு

🕔 June 17, 2024

ந்த ஆண்டின் முதல் காலாண்டில் இலங்கையின் பொருளாதாரம் 5.3% வளர்ச்சியடைந்துள்ளதாகவும், கைத்தொழில் துறையும் 11.8% வளர்ச்சியைப் பெற்றுள்ளதாக நிதி ராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

சனத்தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கைக்கிணங்க, அவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

2022 ஆம் ஆண்டின் இறுதி காலாண்டில் 12% க்கும் குறைவான எதிர்மறையான பொருளாதாரத்தை கொண்டதாக பதிவான இந் நாட்டின், தற்போதைய நிலைமையை நேர்மறையான கண்ணோட்டத்துடன் – நம்பிக்கையுடன் பார்க்க முடியும் என்றார்.

உலக வங்கியின் கணிப்புகளின்படி, இலங்கையின் பொருளாதாரம் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடத்தில் 2.2% வளர்ச்சியடையும் என்றும் அவர் தெரிவித்தார்.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் நாட்டின் பொருளாதாரம் மைனஸ் 07 இற்கு மேல் இருந்ததாக தெரிவிக்கப்பட்ட ஒரு நாட்டில், இரண்டு வருடங்களில் 2% க்கும் அதிகமான பொருளாதார வளர்ச்சியை எட்ட முடிந்தமை மிகவும் நல்ல சாதனை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இலங்கை பின்பற்றும் வேலைத்திட்டம் சர்வதேச நாணய நிதியத்தினால் தெளிவாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். இருந்தபோதிலும் அவதானமாக முனநோக்கிச் செல்ல வேண்டும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்