யுக்திய நடவடிக்கையின் போது 200 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின் கைப்பற்றல்
‘யுக்திய’ விசேட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து கடந்த 167 நாட்களில் 201 கிலோகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.
201 கிலோகிராம் எடையுள்ள ஹெரோயின் கையிருப்பின் பெறுமதி ரூ. 5.434 பில்லியன் ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது.
இலங்கையில் போதைப்பொருள் தொடர்பான நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக 2023 டிசம்பரில் நாடளாவிய ரீதியில் ‘யுக்திய’ எனும் பெயரில்ட பொலிஸ் விசேட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.
இதன்போது போதைப் பொருள் வர்த்தகத்துடன் தொடர்புபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு, பல முக்கிய நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.