வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட அப்பா, மகள், பேத்தி மரணம்

🕔 June 2, 2024
கோப்பு படம்

ழு வயது சிறுமி உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

அவிசாவளை – புவக்பிட்டிய பகுதியில் இந்த துயரச் சம்பவம் இன்று (02) அதிகாலை நடந்துள்ளது.

வெள்ளத்தில் சிக்கிய ஆண், அவரின் மகள் மற்றும் பேத்தி ஆகியோரே இவ்வாறு உயிரிழந்தனர்.

கடும் மழையினால் அவர்களது வீட்டிற்கு அருகில் உள்ள கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று அதிகாலை 2.00 மணிக்கும் 3.00 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்