முன்னாள் எம்.பி பாலித தேவரப்பெரும, மின்சாரம் தாக்கி மரணம்
முன்னாள் பிரதி அமைச்சர் பாலித தேவரப்பெரும 64 வயதில் இன்று (16) காலமானார்.
பாலித தேவரப்பெரும, அவரின் வீட்டில் – மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
களுத்துறை மாவட்டத்தில் இருந்து அவர் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியிருந்தார்.
ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் கடந்த நாடாளுமன்றத்தில் உறுப்பினராகப் பதவி வகித்த பாலித, தற்போதைய நாடாளுமன்றத்துக்கு தெரிவாகவில்லை.
கொவிட் காலப்பகுதியில் மக்களுக்கு அவர் தொடர்ச்சியாக உணவு சமைத்து, நேரடியாக விநியோகித்தமையினால், அக்காலப் பகுதியில் மக்களிடையே அவர் பெருவரவேற்புப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.