அட்டாளைச்சேனையில் ‘யுக்தி’ சஞ்சிகை கையளிப்பு

🕔 April 9, 2024

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தொடராக வெளியிட்டு வரும் ‘யுக்தி’ எனும் இலக்கியச் சஞ்சிகையின் 08ஆவது இதழை எழுத்தாளர்கள், கலைஞர்கள் மற்றும் முக்கியஸ்தர்களுக்கு அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பி.ரி.எம். இர்பான் மற்றும் கலாசார உத்தியோகத்தர் எம்.எஸ். ஜவ்பர் ஆகியோர் வழங்கி வைத்தனர்.

யுக்தி சஞ்சிகையின் 08ஆவது இதழ் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

ஓய்வு பெற்ற விரிவுரையாளர் எம்.ஐ. அப்துல் லத்தீப், ஓய்வுபெற்ற வைத்தியர் எஸ். கியாஸ்தீன், தென்கிழக்குப் பல்கலைக்கழக பேராசிரியர் எஸ்.எம். அய்யூப், டொக்டர் கே.எல். நக்பர், ‘சாட்’ நிறுவனத் தலைவரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அட்டாளைச்சேனை அமைப்பாளருமான ஏ.கே. அமீர், கவிஞர் பாலமுனை பாறூக் மற்றும் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் பிரதித் தவிசாளர் எம்.எஸ். ஜவ்பர் உள்ளிட்ட பலருக்கு ‘யுக்தி’ சஞ்சிகை வழங்கப்பட்டது.

அட்டாளைச்சேனை பிரதேசத்தில் பண்பாட்டு விழாவொன்றை நடத்துவதோடு, அந்த நிகழ்வில் மலர் ஒன்றினையும் வெளியிடுவதற்கான ஆலோசனைக் கூட்டம் நேற்று (08) நடைபெற்ற போது, யுக்திய சஞ்சிகையின் இதழ்கள் பலருக்கும் வழங்கப்பட்டன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்