இறக்காமம் பிரதேச சபை செயலாளராக, அட்டாளைச்சேனை சிஹாபுத்தீன் கடமையேற்பு
– முன்ஸிப் –
இறக்காமம் பிரதேச சபையின் செயலாளராக, அட்டாளைச்சேனையைச் சேர்ந்த சம்சுத்தீன் சிஹாபுத்தீன் இன்று (14) கடமையைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் அதிசிறப்புத் தரத்துக்கான (Supra grade) பரீட்சையில் கடந்த வருடம் இவர் சித்தியடைந்தமையினை அடுத்து இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் அதிசிறப்புத் தரத்துக்கான பரீட்சையில் – கடந்த வருடம் அம்பாறை மாவட்டத்திலிருந்து தமிழ் மொழி மூலம் தோற்றியவர்களில் இவர் மட்டுமே சித்தியடைந்தமை குறிப்பிடத்தக்கது.
முகாமைத்துவ உத்தியோகத்தராக 2009ஆம் ஆண்டு நியமனம்பெற்ற சிஹாபுத்தீன், திருகோணமலை பொது வைத்தியசாலையில் கடமையேற்றார்.
அதன் பின்னர் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் காரியாலயம், அக்கரைப்பற்று மாநகர சபை, அட்டாளைச்சேனை பிரதேச சபை மற்றும் அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகம் ஆகிய இடங்களிலும் பணியாற்றினார்.
2023ஆம் ஆண்டு நடைபெற முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் அதிசிறப்புத் தரத்துக்கான பரீட்சையில், கிழக்கு மாகாணத்தில் 12 பேர் சித்தியடைந்திருந்தனர். அவர்களில் சிஹாபுத்தீன் 08ஆவது இடத்தைப் பெற்றிருந்தார்.