மரதன் போட்டியில் கலந்து கொண்ட திருக்கோவில் மாணவன் மரணம்

🕔 March 11, 2024

பாறுக் ஷிஹான்

திருக்கோவில் மெதடிஸ்த தமிழ் மகா வித்தியாலய மாணவர் ஒருவர் மரதன் ஓட்டப் போட்டியில் கலந்து கொண்ட போது இன்று (11) காலை மரணமடைந்தார். இதனையடுத்து  திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்கு முன்னால் பொதுமக்கள் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.

திருக்கோவில் மெதடிஸ்த தமிழ் மகா வித்தியாலயத்தில் இன்று காலை விளையாட்டு போட்டியின் போது,  மரதன் ஓட்டப்போட்டியில் பங்கேற்ற  மாணவன்  திடிரென  மயக்கமுற்ற நிலையில் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டிருந்தார்.

பின்னர் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக உடனடியாக  அக்கரைப்பற்று ஆதார  வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், அங்கு அம்மாணவன் உயிரிழந்தார்.

திருக்கோவிலை சேர்ந்த  16 வயது மதிக்கத்தக்க ஜெயக்குமார்  விதுர்ஜன் எனும் மாணவனே உயிரிழந்தார்.

இதனையடுத்து  குறித்த மாணவன் உயிரிழந்த சம்பவத்தை அறிந்த பாடசாலை மாணவரகள், பொதுமக்கள் ஆகியோர் மரணமடைந்த மாணவனுக்கு திருக்கோவில் ஆதார  வைத்தியசாலை சிகிச்சை வழங்கத் தவறியதாகத தெரிவித்து, அந்த வைத்தியசாலைக்கு முன்பாக ஒன்று கூடி –  மாணவனின் மரணதுக்கு வைத்தியர்களின் அலட்சிய நிலை காரணம் எனக் கூறி, நீதி கோரி போராடினர்.

இதன் போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்  உயிரிழந்த மாணவன் எந்தவொரு சிகிச்சையுமின்றி மூன்று மணித்தியாலயத்தின் பின் மரணம் அடைந்ததாக சுட்டிக்காட்டினர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்