பெண் வைத்தியரை ‘தகாத முறையில் தொட்ட’ ஆண் வைத்தியர் கைது

🕔 February 8, 2024

பெண் வைத்தியர் ஒருவர் கடமையில் ஈடுபட்டிருந்த போது, அவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் – அரநாயக்க மாவட்ட வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

45 வயதான குறித்த வைத்தியர் இன்று (08) காலை கைது செய்யப்பட்ட நிலையில், மாவனல்லை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளார் என, டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.

பெண் வைத்தியரின் தந்தை அளித்த புகாரின் பேரில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் வைத்தியர் அண்மையில் வேறொரு வைத்தியசாலையில் இருந்து அரநாயக்க மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.

தான் கடமையில் இருந்த போது – தன்னை தகாத முறையில் சந்தேக நபர் தொட்டதாக பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சாட்டியுள்ளார்.

28 வயதுடைய மேற்படி பெண் வைத்தியர் மற்றும் சம்பவத்தின் போது அங்கிருந்த ஐந்து ஊழியர்களிடம் இது தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெண் வைத்தியர் – கேகாலை போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியால் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்