பெலியத்த ஐவர் கொலையின் மற்றொரு சந்ததேக நபரும் கைது: மொத்தம் 12 நபர்கள் சிக்கியுள்ளனர்

🕔 February 5, 2024

‘அபே ஜன பல’ கட்சித் தலைவர் உள்ளிட்ட 05 பேர் பெலியத்த பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கொலைகளுக்கு உதவிய குற்றச்சாட்டில் – சந்தேகநபர் நேற்று (04) ஹபராதுவவில் மாத்தறை பிரிவு சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ரத்கம – கட்டுடம்பே பிரதேசத்தை சேர்ந்த 28 வயதுடையவர்.

பெலியத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையில், கொலைகள் தொடர்பாக இதுவரை கைது செய்யப்பட்ட மொத்த சந்தேக நபர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.

ஜனவரி 23ஆம் திகதி தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பெலியத்த பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்