‘அபே ஜனபல’ கட்சித் தலைவர் உள்ளிட்ட ஐவர் கொலையில் தொடர்புடைய இரண்டு பெண்கள் கைது

🕔 January 30, 2024

‘அபே ஜனபல’ கட்சித் தலைவர் உள்ளிட்ட ஐவர் கடந்த 22ஆம் திகதி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு பெண் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கொலைக்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபர்கள் இருவரும் நேற்று (29) ராகம பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் புஸ்ஸ பகுதியைச் சேர்ந்த 23 மற்றும் 33 வயதுடையவர்களாவர்.

​​குற்றத்திற்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு துப்பாக்கிகள் – சந்தேகநபர் ஒருவருக்கு சொந்தமான மோட்டார் சைக்கிள் ஒன்றில், கராப்பிட்டிய பிரதேசத்தில் இருந்து புஸ்ஸ பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

இதேவேளை, இந்தக் குற்றத்தை இலங்கையிலிருந்து வழிநடத்திய நபரும், அதற்குப் பயன்படுத்தப்பட்ட வாகனமும் அண்மையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தது.

இந்தக் குற்றத்திற்கு தலைமை தாங்கியதாகக் கூறப்படும் சமன் குமார என்ற 54 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, குற்றத்திற்காக பயன்படுத்திய 65-2615 இலக்கம் கொண்ட மிட்சுபிஷி பெஜேரோ ஜீப் வண்டியும் கைப்பற்றப்பட்டுள்ளது.

தொடர்பான செய்தி: ‘அபே ஜனபல’ கட்சித் தலைவர் உள்ளிட்ட ஐவர் கொலைச் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி கைது: வாகனமும் சிக்கியது

Comments

புதிது பேஸ்புக் பக்கம்