சிறைச்சாலைகளில் கைதிகளின் கொள்ளவு எக்கச்சக்கமாக அதிகரிப்பு

🕔 January 24, 2024

நாடளாவிய ரீதியில் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் கொள்ளளவு 290 வீதத்தை தாண்டியுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.

டிசம்பர் 31, 2022 வரை, இலங்கை முழுவதும் உள்ள சிறைகளில் அடைக்கக்கூடிய கைதிகளின் கொள்ளளவு 11,291 ஆகும், ஆனால் அந்தக் காலப்பகுதியில் தடுத்து வைக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,176 என்று உபுல்தெனிய ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

இதன்படி, சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்படக்கூடிய கைதிகளின் கொள்ளளவு 232% ஆக அதிகரித்திருந்தது,

அண்மையில் கணக்காய்வாளர் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட சிறைச்சாலைகளின் நெரிசல் முகாமைத்துவம் தொடர்பான அறிக்கையில் இவ்விடயம் தெரியவந்துள்ளது.

தற்போது நிலைமை மேலும் மோசமடைந்துள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சுட்டிக்காட்டினார்.

கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையின்படி, டிசம்பர் 31, 2022 வரை, அனைத்து கைதிகளிலும் 53 வீதமானோர் போதைப்பொருள் குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சுகாதாரத்தைப் பொறுத்தவரை, 27 சிறைகளில் 187 கழிப்பறைகள் பற்றாக்குறை உள்ளது என்றும், 287 கழிப்பறைகள் பழுதடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கைதிகளில் பெரும்பாலானோர் 30 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் என அறிக்கை மேலும் தெரிவிக்கிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்