வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, மக்கள் காங்கிரஸின் அட்டாளைச்சேனை அமைப்பாளர் தலைமையில் பகலுணவு விநியோகம்

🕔 January 15, 2024

– அபு அலா –

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அட்டாளைச்சேனை பிரதேச மக்களுக்கான பகலுணவு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அட்டாளைச்சேனை அமைப்பாளரும், தொழிலதிபருமான ஏ.கே. அமீர் தலைமையில் இன்று திங்கட்கிழமை (15) வழங்கி வைக்கப்பட்டது.

2800 பேருக்கு உணவு சமைத்து பொதியிடப்பட்டு, இன்றைய தினம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகிக்கப்பட்டது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உயர்பீட உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், கட்சி தொண்டர்கள் உள்ளிட்ட பலர் இப்பணியில் ஈடுபட்டனர்.

கட்சி பேதங்கள் பாராமல் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் உணவு வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கடந்த மூன்று நாட்களாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அட்டாளைச்சேனை கிளையினர் இவ்வாறு உணவு விநியோகித்து வருகின்றார்கள்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்