முன்னாள் அமைச்சர் தயாஸ்ரீத திசேரா, ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்தார்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் (UPFA) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தயாஸ்ரீத திசேரா – ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டார.
எதிர்கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் நாாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாசவை சந்தித்து, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தயாஸ்ரீத திசேரா தனது ஆதரவை வெளியிட்டார்.
இதனையடுத்து ஐக்கிய மக்கள் சக்தியின் நாத்தாண்டிய தேர்தல் மாவட்ட அமைப்பாளராக தயாஸ்ரீத திசேராவை – சஜித் பிரேமதாஸ நியமித்துள்ளார்.
தயாஸ்ரீத திசேரா கடந்த அரசாங்கங்களின் – பல அமைச்சுப் பதவிகளை வகித்துள்ளார்.
இந்து வருட ஆரம்பத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) நாடாளுமன்ற உறுப்பினர் ஷான் விஜயலால் டி சில்வாவும் ஐக்கிய மக்கள் சக்தியுடன் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் அல்லது நாடாளுமன்ற தேர்தலை அரசாங்கம் நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.