உயர்தரப் பரீட்சை நாளை ஆரம்பம்: 03 லட்சத்து 46 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தோற்றுகின்றனர்
2023ஆம் ஆண்டுக்குரிய க.பொ.த உயர்தர பரீட்சை நாளை ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் இன்று அறிவித்துள்ளது.
அதன்படி, இம்மாதம் 31 ஆம் திகதி வரை பரீட்சை நடைபெறும்.
2,302 பரீட்சை நிலையங்களில் நடைபெறும் இந்தப் பரீட்சைக்கு மொத்தம் 346,976 பரீட்சார்த்திகள் தோற்றுகின்றனர்.
அதேவேளையில் 319 ஒருங்கிணைப்பு மையங்கள் பரீட்சைக்கு உதவும்.
உயிரியல் பாடத்துக்கு 58,981 பேரும், இயற்பியல் பாடத்துக்கு 43,712 பேரும், வணிகவியல் பிரிவில் 69,077 பேரும், கலைப் பாடங்களுக்கு 128,924 பேரும், பொறியியல் தொழில்நுட்பப் பிரிவில் 23,201 பேரும் தோற்றவுள்ளனர்.
இதேவேளை பயோ சிஸ்டம்ஸ் தொழில்நுட்பத்துக்கு 11,377 விண்ணப்பதாரர்களுடம் மற்ற பாடங்களுக்கு 11,704 பேரும் தோற்றுகின்றனர்.