புதிய கைத்தொலைபேசிகளை கொள்வனவு செய்யும் போது உறுதிப்படுத்துங்கள் TRC கோரிக்கை

🕔 December 27, 2023

கைப்பேசிகளைக் கொள்வனவு செய்யும்போது, அவை – தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவில் (TRC) பதிவு செய்யப்பட்டவையா என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் மேனகா பத்திரன இதனைக் கூறியுள்ளார்.

குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்)அனுப்புவதன் மூலம், இதனை உறுதிப்படுத்த முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கு, IMEI என டைப் செய்து இடைவெளி விட்டு, குறித்த கைப்பேசியின்15 இலக்க IMEI எண்ணை டைப் செய்து, 1909 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்