‘ஐஸ்’ பயன்படுத்திய பொலிஸ் கொன்ஸ்டபில் பணி இடைநிறுத்தம்

🕔 December 27, 2023

ஸ் போதைப்பொருளை கடமை நேரத்தில் பயன்படுத்திய குற்றச்சாட்டில் பொலிஸ் கொன்ஸ்டபிள் ஒருவர் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

பல்லம பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவந்த குறித்த பொலிஸ் கொன்ஸ்டபிளின் நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட்டமையினால் – கடந்த ஜூலை மாதம் 17ஆம் திகதி பரிசோதனைகளுக்காக பல்லம பொலிஸ் வைத்தியசாலைக்கு அவர் அனுப்பப்பட்டார்.

அதன்போது, அவர் – ஐஸ் ரக போதைப்பொருளைப் பயன்படுத்தியுள்ளமை மருத்துவ பரிசோதனைகளில் உறுதியாகியது.

குறித்த மருத்துவ பரிசோதனை அறிக்கைகளின்படி, சந்தேகநபரான கொன்ஸ்டபிள் புத்தளம் வலயத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் உத்தரவுக்கு அமைய – பணியிலிருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்