அமைச்சர் கெஹலியவிடம் சிஐடி வாக்குமூலம்

🕔 December 26, 2023

முன்னாள் சுகாதார அமைச்சரும் தற்போதைய சுற்றாடல் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்லவிடம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் (சிஐடி) வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்துள்ளனர்.

சர்ச்சைக்குரிய தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பு மருந்து இறக்குமதி விவகாரம் தொடர்பில் இந்த வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

அதன்படி, வாக்குமூலம் பதிவு செய்வதற்காக இன்று காலை 10.00 மணியளவில் அமைச்சரின் வீட்டுக்கு குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று சென்றது.

மேற்படி மருந்து இறக்குமதி தொடர்பில், சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர், சுகாதார அமைச்சின் மருந்து விநியோகப் பிரிவின் பணிப்பாளர் மற்றும் அதே பிரிவைச் சேர்ந்த மேலும் மூன்று அதிகாரிகளும், போலி ஆவணங்கள் மூலம் தரமற்ற இம்யூனோகுளோபுலின் குப்பிகளை இறக்குமதி செய்ததாகக் கூறப்படும் மருந்து நிறுவன உரிமையாளர் உள்ளடங்கலாக பல உயர்மட்டத்தினர் இந்த இவ்விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டு தடுப்பு காவவில் வைக்கப்பட்டுள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்