மூன்று மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த, 29 வயது ஆசிரியர் கைது

🕔 December 21, 2023

மாணவியர் மூவரை – பாடசாலை வளாகத்துக்குள் வைத்து பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சந்தேகத்தின் பேரில் நுவரெலியா – வலப்பனை கல்வி வலயத்தில் ஆசிரியர் ஒருவர் கைது செய் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் கண்டி கித்துல்லை பிரதேசத்தில் வசிக்கும் 29 வயதுடையவர் எனவும் அவருடைய மனைவியும் ஆசிரியர் எனவும் கீர்த்திபண்டாரபுர பொலிஸார் தெரிவித்துள்ளதாக லங்காதீப செய்தி வெளியிட்டுள்ளது.

வகுப்புக்கு பொறுப்பான ஆசிரியராகக் கடமையாற்றும் நபர், பாதிக்கப்பட்ட மாணவிகளில் ஒருவருடன் காதல் உறவை பேணி வந்ததாகவும் – அவர் ஊடாக மற்ற இரு மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மூன்று மாணவர்களிடமிருந்து பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட மாணவிகளில் ஒருவரை – வாட்ஸ்அப் மூலம் நிர்வாணப் புகைப்படங்களை அனுப்புமாறு சந்தேக நபர் வற்புறுத்தியதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்